திங்கள், 14 ஆகஸ்ட், 2017

""பிராம்மண ஸ்திரீகளுக்குத் தனி இடம்''


 மதுராந்தகத்தில் சமீபத்தில் நடந்த நாடகத்திற்காகப் போடப்பட்ட ஒரு துண்டு விளம்பரத்தின் அடியில் ""பஞ்சமர்''களுக்கு டிக்கட்டு கொடுக்கப்பட மாட்டாது.  பிராம்மண ஸ்திரீகளுக்குத் தனி இடம் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது'' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது'' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.  இதற்குக் காரணம் அந்த ஊர் சேர்மன் இந்த நிபந்தனையின் பேரிலேயே நாடகக் கொட்டகைக்கு லைசென்சு கொடுத்திருக்கிறாராம்.  துண்டு விளம்பரம் நமது பார்வைக்கு வந்திருக்கிறது.  கூத்தாடிப் பெண்களும் கூத்தாடி ஆண்களும் கூடி கூத்தாடுகிற இடத்தில்கூட ஆதி திராவிடர்கள் போகக் கூடாது என்பதும், அங்கு கண்ணே!  பெண்ணே!  என்று பேசிக் கொண்டு மூக்கையும் காதையும் கன்னத்தையும் கடித்துக் கொண்டு விளையாடுவதைப் பார்க்கப் போகும் பார்ப்பனப் பெண்களுக்கும் கூட தனி இடம் ஒதுக்கித் தருவது என்பதும் பார்ப்பன ஆதிக்கத்தைக் காட்டுகின்றதா இல்லையா என்று கேட்பதோடு இது சைமன் கமி­னுக்குத் தெரிய வேண்டாமா என்று கேட்கின்றோம்.

- குடிஅரசு, 12.02.1928

ரங்கசாமி அய்யங்கார் தெரு



சென்னையில் பார்ப்பனரல்லாத சமூகத்தினர் ஒரு பிரபலஸ்தர்.  அச் சமூகத்துக்கு ஆக உழைத்தவரென்று பெரிதும் பாராட்டப் பெற்றவரான காலம் சென்ற தணிகாசலம் செட்டியார் பேரால் இருந்த ஒரு தெருவுக்கு அப்பெயர் எடுக்கப்பட்டு ஒரு பார்ப்பனர் பெயர்  அதாவது ரங்கசாமி அய்யங்கார் தெரு என்று பெயர் இடப்பட்டு விட்டது.  இது சாதாரண சங்கதி என்று சொல்லிவிட முடியாது.  செட்டியாருடைய பெயர் மறைந்து விட்டதே என்பதற்கு ஆக நாம் இதைப் பெரிதாக்க வரவில்லை.  இதன் கருத்து என்ன என்பதைப் பொது மக்கள் உணர வேண்டுமென்பதே நமது நோக்கம்.  

சீனிவாசபுரம், தாசில் சீனிவாசபுரம், முனிசீப்பு சீனிவாசபுரம், சிவகாமிபுரம், ராஜகோபாலபுரம் என்பது  100 கணக்கான அய்யர், அய்யங்கார், ஆச்சாரியார், சாஸ்திரி வீதிகள் இருக்க ஒரு பார்ப்பனரல்லாத பிரபலஸ்தருடைய அதுவும் சாகும் வரை 30 வருட காலம் கவுன்சிலராய் இருந்தவரின் பெயர் ஒரு வீதிக்கு இருந்ததை மாற்றி அதற்குப் பதிலாக -  ஒரு பார்ப்பனர் பெயரைக் கொடுப்பது என்றால் அதுவும் ""ஜனநாயகத்தின் பேரால் அமைக்கப்பட்ட ஒரு ஸ்தாபனத்தின் மெஜாரிட்டி ஓட்டைக் கொண்டு செய்யப்படுகின்ற காரியம்'' என்பதே இப்படி இருக்கும்படியாய் இருந்தால் இனி அவர்களது ஆட்சியுள்ள ஸ்தாபனங்களில் நம் மக்கள் கதி என்ன ஆகும் என்று சொல்ல வேண்டுமா?  என்று கேட்கின்றோம்.  இந்த காரியம் இதுவரை பார்ப்பனர்கள் செய்து வந்த கொடுமைகளில் எல்லாம் மிக மிக கொடுமையான காரியம் என்றுதான் சொல்ல வேண்டும்.  இனி இந்த பார்ப்பன ஆதிக்கத்தால் என்ன ஆபத்து நாம் எதிர்பார்க்க வேண்டியது பாக்கி இருக்கிறது என்று கேட்கின்றோம்.

 - குடிஅரசு, 07.08.1938

தென் இந்திய ரயில்வே ஸ்டே­ன்களில் சாப்பாட்டு விடுதிகள்

இதைப் பற்றி "குடியரசு' பத்திரிகையில் இதற்கு முன் இரண்டொரு தடவை எழுதி இருக்கிறோம்.

தென் இந்திய ரயில்வே ஆலோசனைக் கமிட்டி யாரும் ரயில்வே   அதிகாரிகளுக்கு இதைப் பற்றி பல ஆலோசனைகள் சொன்னார்கள்.  பிராமணாதிக்கம் நிறைந்த தென்னிந்திய ரயில்வே கம்பெனிக்கு யார்தான் சொல்லி என்ன பிரயோஜனம்?

தஞ்சாவூர் ரயில்வே ஸ்டே­னில் உள்ள இந்தியர் சாப்பாட்டு விடுதியை நாம் இவ்வாரம் பார்க்க நேர்ந்தது.  அங்கு மாடியின் மேல் கட்டப்பட்டுள்ள இடத்தில் சமையல் செய்யும் பாகம் போக பாக்கியிடத்தில் நாலில் மூன்று பாகத்தைத் தட்டி கட்டி மறைத்து பிராமணர்களுக்கென்று ஒதுக்கி வைத்து விட்டு, நாலில் ஒரு பாகத்தை "சூத்திரர்', "பஞ்சமர்', "மகமதியர்', "கிறிஸ்தவர்', "ஆங்கிலோ இந்தியர்' என்கின்ற பிராமணரல்லாதவருக்கென்று ஒதுக்கி வைத்து, அதிலேயே எச்சிலை போடுவதற்கும், கை கழுவுவதற்கும், வாய் கொப்பளிப்பதற்கும் விளக்குமாறு, சாணிச்சட்டி, கூடை முறம் வைப்பதற்கும், எச்சில் பாத்திரம், சமையல் பாத்திரம் கழுவுவதற்குமாக ஏற்பாடு செய்யப்பட்டு, இவ்வளவு அசிங்கங்களுக்கும் இந்த இடமே உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.  இவைகளைப் பற்றி யாராவது கேட்டால், கேட்பவர்களை வகுப்பு துவே­த்தைக் கிளப்புகிறார்கள்.  இது மிகவும் அற்பத்தனமானது என்று நமது பிராமணர்கள் சொல்லுகிறார்கள், எழுதுகிறார்கள்.  அத்தோடு மாத்திரமல்ல.  அவர்கள் தயவில் பிழைக்கும் பிராமணரல்லாத பத்திராதிபர்களும் கூட ஒத்துப் பாடுகிறார்கள்.  ரயிலில் பிரயாணம் செய்து ரயில்வே கம்பெனிக்குப் பணம் கொடுக்கும் ஜனங்கள் பெரும்பாலும் எந்த வகுப்பார்? 

 அவர்களின் எண்ணிக்கை யயன்ன?  நூற்றுக்கு தொண்ணூற்றேழு பேர் பிராமணரல்லாதாராயும் நூற்றுக்கு மூன்று பேர் பிராமணர்களாயிருந்தும் உள்ள இடத்தில் நூற்றுக்கு எழுபத்தைந்து பாகத்தை அவர்களுக்கு எடுத்துக் கொண்டு, நூற்றுக்கு இருபத்தைந்து பாகத்தை நமக்குக் கொடுத்திருப்பதோடு அதிலேயே எச்சிலை, சாணிச்சட்டி, விளக்குமாறு முதலியவைகளையும் வைத்திருக்கிறார்கள் என்றால் இவர்கள் கைக்கு ராஜீயபாரம் வந்துவிட்டால் இந்தப் பிராமணர்கள் பிராமணரல்லாதாருக்கு எங்கு இடம் ஒதுக்கி வைப்பார்கள்?  கக்கூசுக்கு பக்கத்திலாவது ஒதுக்கி வைப்பார்களா?  என்பதை ""உரிமை பெரிதா, வகுப்பு பெரிதா'' என்று பொய் வேதாந்தம் பேசி வயிறு வளர்க்கும் ""உத்தம தேசபக்தர்களை'' வணக்கத்துடன் கேட்கிறோம்.

- குடிஅரசு, 06.06.1926

இரயில்வேக்களில் உள்ள ஓட்டல்களில் பிராமணர்களுக்கு வேறு ஒரு தனி இடம்

இரயில்வேக்களில் உள்ள ஓட்டல்களில் பிராமணர்களுக்கு வேறு ஒரு தனி இடம், பஞ்சமர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், இந்து பார்ப்பனரல்லாதார்கள் என்பவர்கள் எல்லோருக்கும் ஒரே ஒரு தனி இடமுமாக இரண்டு பிரிவாக பிரித்திருக்கிறார்கள்.  இரயில்வே ஸ்டே­ன்களில் பார்ப்பனர்கள் இறங்கினால், அவர்கள் எவ்வளவு கேவலமானவர்களாக இருந்தாலும் எல்லோரும் சமையலறைக்குள் சென்று நன்றாக புதிதாகச் சூடுடன் உடனே சாப்பிட்டு விட்டு சீக்கிரம் வண்டிக்கு வந்துவிடுகிறார்கள்.

பார்ப்பனரல்லாதார் நிலைமையோ எவ்வளவு மேன்மையாக இருந்தாலும் அவன் வெளி மண்டபத்தில் பலகாரத் தட்டத்துக்கு எதிரில் கூட்டமாக நின்றுகொண்டு சாமி!  சாமி!  என்று காட்டுமிராண்டி ஜனங்கள் திருவிழாக் காலங்களில் கோவிலில் விபூதிக்கு அலைவது போல் ஆளுக்காள் நெருக்கிக் கொண்டு அவதிப்பட்டு ஆறிப்போன கழிபட்ட பதார்த்தங்களை அரைகுறையாய் வாங்கி அவசர அவசரமாய்த் தின்றது.  பாதி, தின்னாதது பாதியுமாய் விட்டுவிட்டு ஓட வேண்டியதாய் இருக்கிறது.  ரயில்வே ஓட்டல்களில் சாப்பாடு போடுவதும் நீட்டிக்கொண்டே இருந்துவிட்டு வண்டி புறப்படும் சமயம் இலை போடுவதும் சாப்பிட வரும் ஆட்கள் அவதி அவதியாய் அரை வயிறு கூட நிறைய சாப்பிட முடியாமல் பணம் கொடுத்து விட்டு ஓடுவதுமாய் இருக்கிறது.  ஊருக்குள் 3 - அணா ஆனால் ரயிலில் 4 - அணா வீதம் கொடுக்க வேண்டி இருக்கிறது.

இதைப் பற்றி ரயில்வே அதிகாரிகளுக்கு எவ்வளவு எடுத்துச் சொல்லியும் சிறிதும் செவிசாய்க்கவே இல்லை.  இரயில்வே கம்பெனியாருக்கு ஒரு அகம்பாவம் இருந்து வருகிறது.  அதென்னவெனில், நம்மைத் தவிர இவர்களுக்கு (பிரயாணி களுக்கு) வேறு கதி என்ன?  என்கின்ற ஆணவம் ஒன்று.  

பத்திரிகைக்காரர்களுக்கு விளம்பரம் கொடுப்பது என்கின்ற எலும்புகளைப் போட்டுவிட்டால், அதன் பேரால் அவர்களுக்குக் கப்பம் கட்டிவிட்டால் நாம் எப்படி, நடந்தாலும் வெளிக்கு வராது என்கின்ற தைரியம் இரண்டு.

மற்றும் அரசாங்கம் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது.  இரண்டும் ஒரே ஜாதி என்பது மாத்திரமல்லாமல் பார்லிமெண்டு மெம்பர்கள் முதல் ரயில்வே கம்பெனிக்குப் பங்குக்காரர்கள் தானே என்கின்ற சலுகை முதலிய காரியங்களோடு ஒரு தனிப்பட்ட பிரயாணி தனது கஷ்டத்துக்கு எப்படி சமாதானம் தேடிக் கொள்ள முடியும் என்கின்ற கவலையற்ற தன்மை ஆகியவைகள் சேர்ந்து இரயில்வே கம்பெனியாரை இக்கஷ்டங்களைக் கவனிக்கச் செய்யாமல் செய்து வருகிறது.

மற்றொரு நாடகம் என்னவென்றால், இரயில்வே பிரயாணிகள் சங்கம் என்று ஒரு போலிச் சங்கம்;  அதற்கொரு தலைவர்;  அவருக்கொரு கவுரவ உத்தியோகம்;  அவர்கள் சொந்தக்காரர் களுக்கு இரயிலில் சம்பள உத்தியோகம்;  வேறுபல சலுகை.  இவை எல்லாம் சேர்ந்து கம்பெனியாருக்கு ஒரு நற்சாட்சிப் பத்திரம்.

இவ்வளவையும் சகித்துக் கொண்டு, ரயில் பிரயாணம் செய்து இரயிலுக்கு பணம் கொடுப்பவர்கள் பார்ப்பனரல்லாதார்.  ஆனால் இரயிலில் 50,100, 200 ரூ. சம்பளமுள்ள பெரிய உத்தியோகங்கள் கொடுப்பது 100க்கு 99-பார்ப்பனர்களுக்கே, 20ரூ. 30ரூ. உத்தியோகங்கள் கூட எல்லோரையும் விட 100க்கு 90 பார்ப்பனர்களுக்குத்தான் கொடுக்கப்படுகின்றன.

- குடிஅரசு, துணைத் தலையங்கம், 02.02.1936

செய்யக்கூடாது


பிராமணன் கீழான தொழிலைச் செய்த போதிலும் பயிரிடும் தொழிலை (உழுவதை) கண்டிப்பாய் செய்யக்கூடாது.  அதைச் செய்யாவிட்டால் ஜீவனத்திற்கு மார்க்கமில்லை என்கின்ற காலத்தில் 
அந்நியனைக் கொண்டு செய்விக்கலாம். 
- (அத்தியாயம் 10, ஸ்லோகம் 83) 

இரும்புக் கலப்பையும் மண்வெட்டியையும் கொண்டு பூமியை வெட்ட வேண்டியதாகும்.  
ஆகையால் பிராமணர் உழுது பயிரிடுதல் கூடாது என்பதாகும். 
- (அத்தியாயம் 10, ஸ்லோகம் 84)

தாழ்ந்த ஜாதியான் மேலான ஜாதியானின் தொழிலைச் செய்தால் அவனுடைய பொருள் முழுமையும் பிடுங்கிக்கொண்டு அவனையும் நாட்டைவிட்டு அரசன் உடனே விரட்டிவிட வேண்டும். 
-(அத்தியாயம் 10, ஸ்லோகம் 96)

சூத்திரனுக்கு சமஸ்காரங்கள், ஓமம் வளர்த்தல் முதலியவைகளுக்கு உரிமை கிடையாது. 
-(அத்தியாயம் 10, ஸ்லோகம் 96)

சூத்திரன் எவ்வளவு தகுதியுடையவனாயினும் தன் ஜீவியத்துக்கு அதிகமாக பொருள் சம்பாதிக்கக்கூடாது.  அப்படிச் சம்பாதித்தால் அது பிராமணனுக்கு இம்சையாக நேரும்
- (அத்தியாயம் 10, ஸ்லோகம் 129)

சூத்திரனுக்கு யாகாதி கர்ம சம்பந்தமில்லை.  ஆதலால் அவன் வீட்டிலுள்ள செல்வத்தை பிராமணன் தாராளமாக வலுவினாலும் கொள்ளலாம். 
 -(அத்தியாயம் 11, ஸ்லோகம் 13)

மனு 10-வது அத்தியாயம் 52 முதல் 57-வது ஸ்லோகம்

திராவிடன் பிணத்தின் துணியையே உடுக்க வேண்டும்.  உடைந்த சட்டியில் அன்னம் புசிக்க வேண்டும்.  உலோகப் பாத்திரங்களை உபயோகிக்கக் கூடாது.  இரும்பு, பித்தளை ஆகியவைகளால் செய்யப்பட்ட நகைகளையே அணிய வேண்டும்.  இவர்கள் ஜீவனத்துக்காக எப்போதும் வேலை தேடிக் கொண்டே திரிய வேண்டும்.

நல்ல காரியம் நடக்கும் போது இவர்களைப் பார்க்கக் கூடாது.  இவர்களோடு பேசக் கூடாது.  

இவர்களைத் தங்கள் ஜாதிக்குள்ளாகவே மணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்த வேண்டும்.  இவர்களுக்கு நேரே எதுவும் கொடுக்கக் கூடாது.  உடைந்த பாத்திரத்தில் அன்னம் போட்டு வைக்க வேண்டியது.  ஊருக்குள் இரவில் சஞ்சரிக்க விடக் கூடாது.

    (மனு 10-வது அத்தியாயம் 52 முதல் 57-வது ஸ்லோகம்)  

மனு 10-வது அத்தியாயம்


ஜாதி தர்மம் தவறிய கலப்பினால் பிறப்பவர்களால்தான் தோல் வேலை செய்யும் (சக்கிலி) ஜாதி.

 பிணத்தின் துணியைப் பிடித்துக் கொள்கிறவர்களும், எச்சில் சாப்பிடுகிறவர்களுமான பறையர்  ஜாதி.

    (மனு 10-வது அத்தியாயம் 44-வது ஸ்லோகம்)  

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...