பிராமணன் கீழான தொழிலைச் செய்த போதிலும் பயிரிடும் தொழிலை (உழுவதை) கண்டிப்பாய் செய்யக்கூடாது. அதைச் செய்யாவிட்டால் ஜீவனத்திற்கு மார்க்கமில்லை என்கின்ற காலத்தில்
அந்நியனைக் கொண்டு செய்விக்கலாம்.
- (அத்தியாயம் 10, ஸ்லோகம் 83)
இரும்புக் கலப்பையும் மண்வெட்டியையும் கொண்டு பூமியை வெட்ட வேண்டியதாகும்.
ஆகையால் பிராமணர் உழுது பயிரிடுதல் கூடாது என்பதாகும்.
- (அத்தியாயம் 10, ஸ்லோகம் 84)
தாழ்ந்த ஜாதியான் மேலான ஜாதியானின் தொழிலைச் செய்தால் அவனுடைய பொருள் முழுமையும் பிடுங்கிக்கொண்டு அவனையும் நாட்டைவிட்டு அரசன் உடனே விரட்டிவிட வேண்டும்.
-(அத்தியாயம் 10, ஸ்லோகம் 96)
சூத்திரனுக்கு சமஸ்காரங்கள், ஓமம் வளர்த்தல் முதலியவைகளுக்கு உரிமை கிடையாது.
-(அத்தியாயம் 10, ஸ்லோகம் 96)
சூத்திரன் எவ்வளவு தகுதியுடையவனாயினும் தன் ஜீவியத்துக்கு அதிகமாக பொருள் சம்பாதிக்கக்கூடாது. அப்படிச் சம்பாதித்தால் அது பிராமணனுக்கு இம்சையாக நேரும்
- (அத்தியாயம் 10, ஸ்லோகம் 129)
சூத்திரனுக்கு யாகாதி கர்ம சம்பந்தமில்லை. ஆதலால் அவன் வீட்டிலுள்ள செல்வத்தை பிராமணன் தாராளமாக வலுவினாலும் கொள்ளலாம்.
-(அத்தியாயம் 11, ஸ்லோகம் 13)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக