நவீன நந்தனாரில் பிராமணர்களைத் தாக்கிப் பேசப்படுவது உண்மையயன்றே வைத்துக் கொள்ளலாம். ஆனால், புராதன நந்தனாரில் (பக்த நந்தனாரில்) பிராமணரல்லாதாரைத் தாக்கிப் பேசப்படுவதும், இழித்து, பழித்து, பறையா? மாடு தின்னும் புலையா? தீண்டப்படாத சண்டாளா. ஈன ஜாதியனே என்றெல்லாம் பேசப்படுவதும், இன்னும் அவன் கோவிலுக்குள் அனுமதிக்கப்படாதவன் என்று சொல்லப்படுவதும் ஆன பேச்சுக்கள் பறையனுக்கு திவான்பகதூர் பட்டம் கிடைத்தது போன்ற மகிழ்ச்சியாய் இருக்கும் என்று கிருஷ்ணய்யர் அவர்கள் கருதுகிறாரா? என்று கேட்கிறோம்.
- குடிஅரசு, தலையங்கம், 27.01.1945
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக