செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

முதலில் இவைகளைச் செய்!


பாடுபடும் நான் ஏன் சூத்திரன்?  பாடுபடாத சோம்பேறிப் பார்ப்பான் ஏன் பிராமணன் என்றால் மட்டும் உனக்குப் பொத்துக் கொண்டு வர வேண்டுமோ கோபம்?  சிந்திக்கும் அறிவு உனக்குச் சற்றேனும் இருக்குமானால், என்னை வகுப்புத் துவேஷி´ என்று கூற உனக்கு நாக்கு நீளுமா?  ஏன் இந்தப் பித்தலாட்டம்?  நாலு ஜாதியென்று பிரித்துக் கூறும் சாஸ்திரங்களை ஏன் அனுமதிக்கிறாய்?  ஜாதி பிரிவினை பற்றிக் கூறும் பகுதிகளைச் சாஸ்திரங்களிலிருந்து எடுத்து விட்டாயா?  சாஸ்திரங்களை யெல்லாம் கொளுத்திவிடு!  ஜாதிப்பிரிவினை பற்றிக் கூறும் சகலத்தையும் அழி!  கோயிலில் மணியடிக்கச் சகல ஜாதிக்கும் உரிமையு ண்டு என்று சட்டம் செய்!  பிறகு நான் வகுப்புப் பற்றிப் பேசினால் வாயேன் சண்டைக்கு?  அதுவரை பொறுத்துக் கொண்டிரு தம்பி!  இன்றேல் உன் வண்டவாளமெல்லாம் அம்பலமாகிவிடப் போகிறது.

- குடிஅரசு, சொற்பொழிவு, 08.05.1948

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...