செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

முன்னேற்றம் என்றால் என்ன?


பொதுவாகவே முன்னேற்றம் ஒரு நாட்டு மக்கள் சமுதாய வாழ்க்கையிலும், பொருளாதாரத்திலும் முன்னேறுவதே முக்கியமான தாகும். அதற்கேற்றபடி நாட்டின் தலைமை உயர்த்தப்படுவதேயாகும்.

மற்றும், மனிதன் மற்றவனைவிடத் தான் மிகமிகக் கீழானநிலையில் இருக்கிறோமே என்று அதிருப்தியும், துக்கமும் படாமையும் ஆகும். அப்படிப்பட்ட நிலைமையில் திராவிடர்களாகிய நாம் நம்மில் மிகப் பெரும்பாலோர் சமுதாயத் துறையிலாவது, பொருளாதாரத் துறையிலாவது அதற்கேற்ற கல்வி அறிவிலாவது, முன்னேற்றமோ அல்லது மற்ற மக்களுக்கும் நமக்கும் அதிகமான பேதமில்லாத தன்மையோ பெற்றிருக்கிறோமோ?

அப்படி இல்லையானால், கூடி இருப்பதில் என்ன பயன்? நமது பங்காளிகளுக்கு மேலாக நாம் உழைத்துப் பயிரிட வேண்டும். அதன் பலனை நமக்கு மேல் நமது பங்காளிகளே அனுபவித்துக் கொண்டு நாம் பட்டினியால் செத்துப் போகாமலிருக்க மாத்திரம் (ஏனெனில் செத்துப் போனால் நமது பங்காளிகளுக்கு இம்மாதிரி பாடுபட ஆள்கள் கிடைக்காமல் போய்விடுமே என்கின்ற சுயநல கவலைமீது) உயிர்க்கஞ்சி மாத்திரம் பெற அருகதை உடையவர்கள் என்றால், எப்படி அயலார்களோடு கூடி ஒத்துழைக்க முடியும். ஆதலால்தான் நாம் தனித்து நமது நிலத்தைப் பிரித்துக்கொண்டு நமது ஏர்களைத் தனியாய் ஓட்டி ஆழ உழுது பயிரிட்டுக் கொள்ளுகிறோம் என்று சொல்லுகிறோம். இதனால் யாருக்கும் எவ்வித நிலையான கெடுதியும் ஏற்பட்டுவிடாது.

(நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு - தந்தை பெரியார்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...