1977 செப்டம்பரில்
தமிழகத்துக்கு வந்த பிரபல சோசலிஸ்டும்,
பொருளாதார மேதையுமான அசோக் மேத்தா அவர்கள்
சென்னையில் செய்தியாளர்க ளிடையே பேசும்போது கீழ்க்கண்ட
கருத்தைச் சொன்னார்.
தென்னகத்தில்
குறிப்பாகத் தமிழ்நாட்டில் இன்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே பிற்படுத்தப்பட்ட மக்களின்மீது
உயர்ஜாதிக்காரர்கள் செலுத்திய ஆதிக்கத்தை எதிர்த்து சுயமரியாதை இயக்கம் அறைகூவல் விடுத்தது.
பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிலே வெற்றி
கண்டு அரசியலையும் கைப்பற்றினார்கள்.
தமிழகத்தில் ஏற்கெனவே நடந்துள்ள இத்தகைய மாற்றத்தின் எதிரொலியை
அண்மையில் சில மாதங்களாக வட
மாநிலங்களில் நடந்துள்ள அரசியல் மாற்றங்களில் காணமுடிகிறது.
ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களாக இருப்பவர்கள்
விவசாயிகள்தான். அத்தகைய பிற்படுத்தப்பட்ட மக்கள்
இப்பொழுது வட மாநிலங்களில் அரசியலைக்
கைப்பற்றிக்கொண்டு வருகிறார்கள். வடநாட்டுக்கும் தென்னாட்டுக்கும் இடையே இப்படிப்பட்ட சிந்தனைப்
பூர்வமான ஒற்றுமை ஏற்பட்டு இருக்கிறது!
என்று அசோக் மேத்தா அவர்கள்
குறிப்பிட்டார்கள்.
(இந்தியன்
எக்ஸ்பிரஸ், 16.09.1977)
நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.புங்குன்றன்
நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.புங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக