புதன், 2 ஆகஸ்ட், 2017

ஊ.பு.அ.சவுந்தரப் பாண்டியனார்


சுயமரியாதை இயக்கத்தின் தலைவராக - பாண்டி மண்டலத்தில் பட்டத்து யானையாகப் பவனி வந்த .பு..சவுந்தரபாண்டியனார் அவர்களின் நினைவு நாள் இன்று (1953).

செங்கற்பட்டில் 1929-இல் நடைபெற்ற மாகாண முதல் மாநாட்டின் தலைவர் மட்டுமல்ல; இயக்கத்தின் தலைவராகவும் இருந்தவர். அவரை இயக்கத்திற்குத் தலைவராக வைத்து தன்னைத் துணைத் தலைவராக ஒப்பம் செய்தவர் தந்தை பெரியார்! தந்தை பெரியாரின் பெருந்தன்மையும், சவுந்தரபாண்டியனாருக்கு உள்ள பெருமையும் தெளிவாக விளங்கும்.

சென்னை - தியாகராயர் நகரில் உள்ள பாண்டி பஜார் என்பது .பு..சவுந்தரபாண்டியன் அவர்களின் பெயரில் உருவாக்கப்பட்ட பஜார் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்?

அந்தப் பாண்டியன் பஜார் பாண்டி பஜாராகி - அதன் நோக்கத்தையே கொலை செய்துவிட்டார்களே - வெள்ளுடை வேந்தர் சர்.பி.தியாகராயர் பெயரால் விளங்கும் நகரை டி.நகராக ஆக்கியதுபோலவே!

சவுந்தரபாண்டியனார் சிறந்த சமூக நலவாதி - நாடாளுமன்றவாதி என்கிற ஒரு பக்கம் மட்டுமே நாட்டு மக்களுக்குத் தெரியும். ஆனால், அவர் தலைசிறந்த விவசாயி வேளாண் துறையில் பல சாதனைகளைப் படைத்து - பல கேடயங்களையும், விருதுகளையும் பெற்றவர் என்பதும் பலருக்கும் தெரியாத சேதிதான்.


விடுதலை ஒற்றைப்பத்தி - 1, 22.02.2001



நூல் : விடுதலை ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...