ஞாயிறு, 16 ஜூலை, 2017

மறுமலர்ச்சியோ!


கேள்வி: தமிழக அரசின் கோபுரச் சின்னம் மாற்றப்பட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கேட்க ஆரம்பித்துள்ளனரே?

பதில்: அரசுச் சின்னம் மதச் சார்பற்றதாக இருக்க வேண்டும் என்று காரணம் கூறுகிறார்கள். சின்னத்தை உருவாக்கிய அறிஞர்களுக்கு நமது மதச் சார்பின்மை தெரியாததல்ல. கட்டடக் கலை ரீதியில் தமிழகக் கோயில் கோபுரங்கள் தனித் தன்மை வாய்ந்தவை. கோபுரம் உடனடியாகத் தமிழகத்தை உணர்த்தும். அதற்காகத்தான் கோபுரச் சின்னமே தவிர மதத்துக்காக அல்ல. மேலும், அசோகரின் சிங்கச் சின்னமும், தேசியக் கொடியும் அதில் உண்டு.

இவ்வாறு பதில் சொல்லியிருப்பது ஒரு அக்கிரகார இதழைத் தவிர வேறு யார்தான் சொல்லியிருக்க முடியும்? கல்கி (25.4. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3) இதழ்தான் இவ்வாறு பதில் சொல்லுகிறது.

கல்கி கூறுவதை விவாதத்துக்காக எடுத்துக் கொண்டாலும், ஓர்  அரசின் சின்னம் கட்டடக் கலையைத் தான் சார்ந்ததாக இருக்க வேண்டுமா?

திருவல்லிப்புத்தூர் கோயில் கோபுரச் சின்னம் தான் அது என்பதை மறுக்க முடியுமா? அது இந்து மதக் கோயில் என்பதைத் தான் புறந்தள்ள முடியுமா?

மதச் சார்பற்ற ஓர் அரசுக்கு மதம் சார்ந்த ஒன்று அரசு முத்திரையாக இருக்கலாமா என்ற வினாவுக்குப் பதில் சொல்ல வக்கற்ற நிலையில் கட்டடக் கலை என்ற முகமூடிப் போடுவதன் சூட்சமம் தமிழர்களுக்குத் தெரியாதா?

திருவள்ளுவர் உலக மக்களுக்கே தேவையான உயர் கருத்துகளை எடுத்துக் கூறியுள்ளவர். காலங் கடந்து நிற்கும் கருத்துகளை ஒண்ணே முக்கால் அடியில் உணர்த்துகிறார்.
மதம் சாராத அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள் என்ற சிறப்பும் உண்டு. இந்த நிலையில் உள்ளபடி தமிழராக இருப்பவர்கள் எவரும் ஆயிரம் கைகளைக் கடன் வாங்கியல்லவா வரவேற்று வாழ்த்துப் பா படிப்பார்கள்.

குறளா? கோயில் கோபுரமா? என்று கணக்கெடுப்பு வைத்துக் கொள்ளத் தயார்தானா என்று சவால் விட்டுக் கேட்கிறோம்.

நாரதன் என்ற ஆணுக்கும், கிருஷ்ணன் என்ற ஆணுக்கும் பிறந்த பிள்ளைதான் 60 தமிழ் வருஷங்கள் என்று ஆபாசமாக எழுதி வைத்திருந்ததை மாற்றி, தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அரசு ஆணை பிறப்பித்ததையே வரவேற்க மனம் இல்லாத வஞ்சகப் பார்ப்பனர்கள், கோபுரத்துக்குப் பதில் திருவள்ளுவர் என்பதை எப்படி ஏற்றுக் கொள்வார்கள்?

கோயில் ஒழிந்த இடம் பார்ப்பான் செத்த இடமாயிற்றே! அது சரி, கல்கி எழுதியதை ஆதாரமாகக் காட்டி மதிமுகவின் அதிகாரப் பூர்வ சங்கொலி ஏடு (30.4. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3) திருவள்ளுவர் உருவம் கூடாது, கோபுரம் தான் இருக்க வேண்டும் என்று எழுதுகிறதே, என்ன சொல்ல! , அது தெரியாதா? இதற்குப் பெயர்தான் மறுமலர்ச்சி என்பதோ!

25.4. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 3,


ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...