நேற்று மாலை ஏடுகளில் ஒரு பரபரப்பான செய்தி.
50 கோடி ரூபாய் மதிப்புள்ள திருத்துறைப்பூண்டி மருந்தீசுவரர் கோயிலுக்குச் சொந்தமான மரகதலிங்கம் கைப்பற்றப்பட்டது என்பதுதான் அந்தச் செய்தி.
இது 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாம். இந்த மரகதலிங்கத்தை இந்திரனே பூஜித்து வந்தானாம். (இடையில் விட்டுவிட்டானோ!)
லிங்கம் என்றால் ஆண் குறி!
அது மரகதத்தில் செய்யப்பட்டதாம்! ஆகா, எப்படிப்பட்ட பக்தி!
இன்னும் இந்த மரகதலிங்கத்துக்கு என்ன கூடுதல் விசேஷம்? (கதை அளப்புக்கு என்ன பஞ்சமா?).
அந்த மரகதலிங்கத்தை முசுகுண்ட சக்ரவர்த்தியிடம் கொடுத்து ஏழு பிரசித்திப் பெற்ற கோயில்களில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருமாறு இந்திரன் கூறினானாம்.
இதன் பொருள் என்ன? இந்த மரகத லிங்கத்துக்கு அரும்பெரும் சக்தி உள்ளது என்பதுதானே இதன் அய்தீகம்.
இவ்வளவு சக்தி வாய்ந்த
அதுவும் தேவர்களின் தலைவனான இந்திரனே வழிபட்டு வந்த லிங்கத்தை கொள்ளையர்கள் எப்படி திருடியிருக்க முடியும்?
அப்படி திருடியிருக்கிறார்கள் என்றால் இந்த லிங்கங்கள் தெய்வ சக்தி வாய்ந்தவை என்பதெல்லாம் அசல் டூப்பாக இருக்கவேண்டும். இரண்டில் ஒன்றுதானே உண்மையாக இருக்கவேண்டும்.
நம் முன் நிற்கும் கேள்விகள் இரண்டே இரண்டுதான். மரகதலிங்கத்துக்குத் மகாசக்தி உண்டென்றால், அதனைத் திருடிச் செல்ல முடியுமா? அதனைத் திருடியிருக்கிறார்கள் என்பதிலிருந்து லிங்கத்துக்குச் சக்தியாவது, புடலங்காயாவது என்பதை மரியாதையாக, நாணயமாக ஒப்புக்கொள்ள வேண்டுமா இல்லையா?
இந்த சிவலிங்கத் திருடர்களைக் கண்டுபிடித்த காவல்துறை அதிகாரி யார் தெரியுமா? காதர் பாஷா.
இது என்ன அநியாயம்? சிவலிங்கத் திருட்டை ஒரு சாயபு கண்டுபிடிக்கலாமா? என்று அக்ரகாரத்தார் அலறக்கூடும்.
இது கருணாநிதி சதி என்று இந்து முன்னணி ஆர்.எஸ்.எஸ்.
வகையறாக்கள் கூக்குரல் போட்டாலும் போடுவார்கள்
யார் கண்டது?
கடவுளையே கண்டுபிடித்துக் கொடுக்க மனிதர்கள் (காவல்துறையினர்)தான் தேவைப்படுகிறார்கள்.
கடவுளை மற,
மனிதனை நினை! என்ற பெரியார் வாக்கு பலித்ததா இல்லையா?
27.10.2009 (விடுதலை ஒற்றைப்பத்தி -
2)
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக