அவ்வப்போது ராமன் குடிகாரன்; வால்மீகியே சொன்னார்
ராமன் குடி காரன் என்று; துளசிதாஸர் ராமாயணத்தில் சீதைக்கு, ராமன் சகோதரன்... என்றெல்லாம் புரட்சிகரமான ராமாயண உபந்யாஸம் நடத்தவேண்டும்; ஹிந்து மத நம்பிக்கைகளை இழித்துப் பேசவேண்டும் கலைஞர் இவ்வாறெல்லாம் பேசுவாராம்! தி.மு.க. ஆட்சியையும், கலைஞரையும் வசைபாடு வதற்கென்றே இதழ் நடத்திக் கொண்டு இருக்கிற திருவாளர் சோ ராமசாமி ஏடு தலையங்கத்தில் இவ்வாறும் ஒரு செருகல்.
(துக்ளக், 28.5.2008).
இந்தியாவிலே ஒரு இராமாயணம் இருப்பதுபோலவும், வேறு வேறு மொழிகளில் உள்ள இராமாயணங்களில் இராமனுக்கும் சீதைக்கும் வேறு வேறு உறவுகள் இல்லாததுபோலவும், கலைஞர் ஏதோ கற்பனையில் அவ்வாறு கூறுவதுபோலவும், சோ பார்ப்பனர் சித்தரிக்க முயல்வது அவர் அணிந்துள்ள பூணூலுக்குத் தகுதியாக இருக்கலாம். ஆனால், கலைஞர் சொன்னதற்கு ஆதாரம் நிச்சயம் உண்டு. அவாள் தலைவர் ஆச்சாரியார் (சி.ஆர்.)
எழுதிய சக்ரவர்த்தி திருமகனுக்கே அந்தக் காலகட்டத்திலேயே சக்ரவர்த்தியின் திருமகன் என்று முரசொலியில் ஆதாரபூர்வமாக மறுப்பு எழுதினார் கலைஞர் பிறகு நூலாகவும் வெளிவந்துள்ளது.
(இதுவரை எந்தக் கொம்பராலும் மறுப்பு எழுதிட முடியவில்லை).
வெகுதூரம் போவானேன்? அவாள் வட்டாரத் தைச் சேர்ந்த மனோகர் நாடகமாக நடித்த இலங்கேஸ்வரனில்கூட சீதை ராவணனின் மகள்தானே
மறுக்க முடியுமா? ராமன் குடித்த மதுவை தேன் என்று திரிபுவாதம் செய்து ராமனைக் காப்பாற்ற சோ போன்ற வக்கீல்கள் புறப்பட்டு இருக்கிறார்கள்.
புகையிலை
சுருட்டுக்
குடிக்கும் பிராமணர்கள் அடுத்த பிறவியில் பன்றிகளாகப் பிறப்பார்கள் என்று பத்மபுராணம் கூறுகிறது. அப்படியென்றால், இப்பொழுது சாக்கடைகளில் படுத்துப் புரண்டு கொண்டு இருக்கும் பன்றிகள் எல்லாம் போன ஜென்மத்தில் இத்தகைய லாகிரிப் பொருள்களைப் பயன்படுத்திய பார்ப்பனர் என்று நாம் எழுதினால், அது எப்படி கேலியாகும்? இனிமேல் இந்தப் பன்றிகளைப் பார்த்து வாருமய்யா, வாஞ்சி நாதப்பட்டரே! சாப்பீட்டிரா சத்திய மூர்த்தி அய்யரே? சுத்தப்படுத்தியாயிற்றா சு.சாமிகுருக்களே? கோயில் பக்கம் போனீரா கோவிந்த தீட்சதரே! என்று கூறினால், அதில் என்ன தப்பு?
சோவுக்குத்தான் ஏகடியம் பேச
எழுதத் தெரியுமா?
25.5.2008 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக