புதன், 16 ஆகஸ்ட், 2017

என்ன சமத்துவம்?


சுதந்திரத்தின் பயனாய் இனிமேல் நமது நாட்டில் பார்ப்பனனும் பறையனும் இருக்க மாட்டானா?  என்று கேட்கின்றேன்.  பறையன் உள்ளே விடப்படாத கோவில்கள் இடிபடுமா?  என்று கேட்கின்றேன்.  சாமிகளின் பேரால் நடைபெறும் வீண் செலவுகள் ஒழிக்கப்படுமா?  என்று கேட்கிறேன்.  இன்றைய தினம் ஜாதிகளின் பேரால் இருந்து வரும் கொடுமையும் இழிவும் கொள்ளையும் ஒழிக்கப்படுமா?  என்று கேட்கின்றேன்.  குடும்பத்துடன் பாடுபட்டும் பட்டினி கிடப்பவனும், பாடுபடாமல் இருந்து கொண்டு குடும்பத்தோடு மேன்மையாய் வாழுபவனும் இருக்க மாட்டானா?  என்றும் கேட்கின்றேன்.  ஜமீன்தாரன் என்பவனும் குடியானவன் என்பவனும் இல்லாமல் போய்விடுவார்களா?  என்றும் கேட்கின்றேன்.  இவைகளை ஒழிக்காத சமத்துவம் என்ன சமத்துவமாகும்?

-  குடிஅரசு, சொற்பொழிவு, 06.09.1937

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...