செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

வியாதியைப் போக்க!



திரு. விஜயராகவாச்சாரியார் அவர்கள் ""தீண்டாமை எப்படி வந்தது என்பதைப் பற்றி யோசிப்பதோ, அல்லது இந்து மதத்தின் பேரில் குறைகூறிக் கொண்டிருப்பதோ தீண்டாமையை விலக்குவதற்குரிய வழியாகாது'' என்று கூறியிருப்பது எவ்வளவு மோசமான அபிப்பிராயம் என்று யோசித்துப் பாருங்கள்.  ஒரு வியாதியைப் போக்க வேண்டுமானால் அது எவ்வாறு உண்டாயிற்று என்பதை முதலில் தெரிந்து கொண்டு அது தோன்றுவதற்குக் காரணமாயிருந்த தீமையை ஒழிப்பதன் மூலமாக அன்றோ எப்பொழுதும் அந்த வியாதியை வரவொட்டாமல் தடுக்க முடியும்?  இதை விட்டுவிட்டுத் தற்கால சாந்தியாகச் சில மருந்துகளைக் கொடுத்து அதன் தொந்தரவைத் தணித்துவிட்டால் போதுமா?  மறுபடியும் அடிக்கடி அவ்வியாதி உண்டாகித் துன்பப்படுத்தாதா?

- குடிஅரசு, தலையங்கம், 27.03.1932

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...