செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

பார்ப்பன ஆதிக்கமும் எதேச்சாதிகாரமும்



பிராமணரல்லாதாருக்கே வேலை கொடுக்க வேண்டுமென்றும், பிராமணர்களுக்கு உத்தியோகம் கொடுக்கக் கூடாதென்றும், அய்க்கோர்ட் சர்க்குலர்களும், கவர்ன்மெண்ட் ஆர்டர்களும் இருந்தும், அவைகளைக் குப்பைத் தொட்டியில் எறிந்து விட்டு நூற்றுக்கணக்கான பார்ப்பனர்களை திருச்சி, தஞ்சாவூர் ஜில்லாக்களிலிருந்து இந்த ஜில்லாவுக்கு இறக்குமதி செய்து வருகிறார்கள்.  சமீபமாக ஏற்பட்ட வகுப்புவாரி உத்தியோகம் கொடுக்க வேண்டுமென்ற ஜி.ஓ. வை குயுக்தியாக அர்த்தம் பண்ணி தங்கள் டிபார்ட்மெண்டுக்கு அமலுக்கு வரவில்லையயனச் சொல்லி விட்டார்கள்.  வரு­த்தில் பெயரளவில் சில பிராமணரல்லாதாருக்கு ஒரு மாச, இரண்டு மாசத்தில் வேலை போட்டு விரட்டிவிட்டு, நீடித்த பதிலையும், பர்மனெண்டு வேலைகளையும் பிராமணர்களுக்கே போட்டு தங்கள் ஆதிக்கத்தை அதிகப்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.

8 வரு­ம் 10 வரு­ங்களுக்கு முன்னதாகவே இந்த டிபார்ட்மெண்டில் நிலைத்து ஆக்டிங் பார்த்து வரும் பார்ப்பனரல்லாதாரின் சர்வீஸைக் கவனித்தால் 2,3 வரு­ம் தானிருக்கும்.  ஏனெனில் வரு­த்தில் 4 மாசம் தான் பதில் போட்டிருப்பார்கள்.  சமீப காலத்தில் வந்த பிராமணன் தொடர்ச்சியாக 2 அல்லது 3 வரு­ம் பதில் பார்த்துவிட்டு, பிராமணரல்லாதாருக்கு சீனியர் என வந்து விடுவான்.  இப்பிராமணர்களுக்கே வேலைகளும் பெர்மணன்டாகி விடும்.  ஆதலால், பிராமணரல்லாத ஒருவன் 10 வரு­ங்களுக்கு முன்பு இருந்து ஆக்டிங் பார்த்து வந்தாலும் சீனியராக மதிக்கப்பட மாட்டான்.  தொடர்ச்சியாக ஆக்டிங் வேலையும் கிடையாது.  காயமான உத்தியோகம் கிடைப்பதரிது.  சிலருக்கு இந்த ஆக்டிங் வேலையுங்கூட போடுவதில்லை.  சீனியர் பிரகாரம் சர்வீசைக் கவனித்து வேலை போடுவதாகச் சொல்லுவார்கள்.  திடீரென ஒரு மாசம்கூட சர்வீஸ் இல்லாத புதிய பிராமணர்களுக்கு பெர்மென்டாக உத்தியோகங்கள் போட்டுவிடுவார்கள்.  இவ்விதமே இதுவரை எத்தனையோ புதிய புதிய பார்ப்பனர்களுக்கு வேலை போட்டுக் கொண்டு வருகிறார்கள்.  அப்பொழுது சீனியாரிட்டி என்பதையே மறந்து விடுவார்கள்.  இவர்கள் செய்யும் அநீதியை மேல் உத்தியோகஸ்தர்களுக்குத் தெரிவித்தால் அவர்களுக்கு வேண்டிய கெடுதியைச் செய்வார்கள்.  ""பிராமணர்களுக்கு மட்டும் சாப்பாடு'' என சில கிளப்புகளில் போர்டு போட்டிருப்பதைப் போல் ""பிராமணர்களுக்கு மட்டும் உத்தியோகம்'' என கோர்ட் வாசல்களில் போர்டுதான் போடாத குற்றம்.  போர்டு போட்டிருந்தால் பிராமணரல்லாதாரில் சிலர் இதில் நுழைந்து கஷ்டப்பட்டு வாழ்நாளை வீண் நாளாக ஆக்கி இருக்க மாட்டார்கள்.  சுயமரியாதையுள்ள எந்த மனிதனும் இதைச் சகிக்க முடியுமா?

சென்ற 10 வரு­ங்களாக எத்தனை பிராமணரல்லாதாருக்கும், பிராமணர்களுக்கும் பெர்மனென்டாக வேலை போட்டிருக்கிறார்கள்.  சென்ற 10 வரு­ங்களாக இந்த ஜில்லாவில் ஜட்ஜுகளும், சிரஸ்தார்களும் மற்ற உத்தியோகஸ்தர்களும் பிராமணர்களாகவே இருந்து வருகிறார்கள்.  சென்ற மாதம் இராமநாதபுரம் ஜில்லா கோர்ட்டிலும், சிவகங்கை சப் கோர்ட்டிலும் திடீரென ஒரு மாசம்கூட சர்வீஸ் இல்லாத 2 பார்ப்பனர்களுக்கு பெர்மனென்டாக அமினா வேலை போட்டிருக்கிறார்கள்.  8 வரு­ம் 10 வரு­ங்களாகக் காத்துக் கொண்டிருக்கும் பார்ப்பனரல்லாதார் கதி என்ன ஆகிறது.  மேற்படி நியமனங்களை ரத்து செய்து பிராமணரல்லாதாருக்குப் போடும்படியாக அய்க்கோர்ட்டாரையும், கவர்ன்மெண்டாரையும் கேட்டுக் கொள்கிறோம்.

இப்பொழுது இந்த ஜில்லாவில் 4,5 அமினா வேலைகள் பர்மனெண்டாக காலியாக இருக்கிறது.  இவைகளையாவது பிராமணரல்லாதாருக்குக் கொடுப்பார்களா?  அல்லது அக்கிரகாரத்திலுள்ளவர்கள் தான் உரித்தானவர்களெனச் சொல்லப் போகிறார்களா?

கவர்ன்மெண்டாரும், அய்க்கோர்ட்டாரும் கிருபை செய்து பிராமணரல்லாதாரின் குறைகளை நீக்கி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைச் சீக்கிரமாக அமலுக்குக் கொண்டுவந்து உதவியற்றுத் தவிக்கும் பிராமணரல்லாதாரை ரட்சிக்கும் படியாகக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறோம்.

- குடிஅரசு, 23.06.1935

நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...