செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

அடங்கி விட்டதா அகங்காரம்?


கேள்வி - "பிராமணர்கள் தமிழகத்தில் விரும்பப்படவில்லை' என்ற துக்ளக் ஆசிரியர் சோவின் கருத்து பற்றி?

பதில் - பிராமணர்கள் உயர்ஜாதியினர் என்ற அகங்காரம் என்றோ மறைந்து விட்டது.  சமுதாய நீரோட்டத்தில் தங்களையும் அவர்கள் இணைத்துக் கொண்ட நிலையில், அவர்களை ஒதுக்குவதும், ஒடுக்குவதும் வெகுவாகக் குறைந்து போய்விட்டது.  இப்பொழுது தோன்றியிருப்பது சமுதாயத்தைப் பிரிக்கும் வேறுவித ஜாதிப்பிரிவினை ஆபத்து!

(கல்கி, 19.9.2010)

- இவ்வாறு "கல்கி' இதழில் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

28.8.2010 "தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளேட்டில் பக்கம் எட்டில் தலைப்புச் செய்தியாக.

Ignored by Political parties and Denied Welfare, Large Sections of a Traditionally Elite in Poverty.

Brahmins on the margins, Fight for survival எனும் தலைப்பில் வெளி வந்தது.

இதில் "சோ' ராமசாமியின் கருத்தும் கேட்கப்பட்டுள்ளது.  "Brahmins are not wanted in Tamilnadu, beyond that I do not want to comment'  என்று கூறியுள்ளார்.

ஆதங்கத்தோடோ, ஆத்திரத்தோடோதான் அய்யர்வாளின் வாயிலிருந்து இச்சொற்கள் கொப்பளித்துக் கிளம்பியிருக்க வேண்டும்.

அவர் எந்தக் கண்ணோட்டத்தில் சொல்லியிருந்தாலும் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல பார்ப்பனர்கள் என்பவர்கள் எங்கும் தேவைப்டாதவர்கள்தான்.

- கவிஞர் கலி. பூங்குன்றன்
விடுதலை ஞாயிறு மலர், 26-9-2010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...