திங்கள், 17 ஜூலை, 2017

வைக்கம் எச்சில் இலை

வைக்கம் எச்சில் இலை

வைக்கம் கோவிலில் பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலை ஒன்று சில சமயங்களில் 0.0.6 வீதம் விற்கப்படுகிறது. (அந்நாளில் இது அரையணா மதிப்பு)
வியாதியஸ்தர்களுக்கு வியாதி சவுக்கியமாகி விடும் என்றும்சந்தானமில்லாதவர்களுக்குச் சந்தான விருத்தியாகுமென்றும் அங்குள்ள பிராமணரல்லாத ஜனங்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்திவைக்கப்பட்டிருக்கிறதுஆனால்இது தமிழ்நாட்டில் ஒரு பிராமணனுக்கு ரூ.1000, 500 என்று விகிதம் பேசி நம்ம வீட்டுக்கு அழைத்து வந்துஅவர்களுக்குப் பணத்தைக் கொட்டி பூசை செய்துஅந்தக் கால் கழுவிய தண்ணீரைச் சாப்பிட்டால் தனது பாபம் போய்விடும் என்று நம்பும்படியாக செய்கிறதை விடப் பெரிய மோசடியல்ல.

ஆதாரம் : குடிஅரசு 9.8.1925

வைக்கம் எச்சில் இலை

லோகோபகாரி மூன்றாம் பக்கத்தில் வைக்கத்தெச்சிலையைப் பற்றி நமது குடிஅரசு பத்திரிகையில் வெளியான குறிப்பை வெளியிட்டு அந்த எச்சிலையை உண்பதால் நோய் நீங்குமென்ற நம்பிக்கையிருப்பது உண்மையாயினும்எச்சிலை விற்கப்படுவதாகச் செய்வது உண்மையல்லவென்று மலையாளத்துப் பிராமணர் ஒருவர் கூறுகிறார் என்ற நமது குறிப்பும் வெளியாயிருந்ததுவைக்கத்திலே பிறந்து வளர்ந்து வாழ்பவரும்வைக்கத்திலுள்ள சத்தியாக்கிரக ஆசிரமத்தில் தற்காலக் காரியதரிசியுமான ஸ்ரீமான் கேநாராயணன் இதுபற்றி நமக்கு எழுதியிருக்கிறார்அவர் சொல்லுவதின் சுருக்கம்வைக்கம் எச்சிலை சகல நோய்களையும்மலட்டுத்தன்மையையும் நீக்கவல்லதென்ற நம்பிக்கை பாமர ஜனங்களுக்குள் உண்டுவைக்கத்தம்மன் கோயில் எச்சிலைகள் பரம்பரையாக வாரியர் குடும்பத்தாருக்கு உரியனஅவர்களே கோயிலில் தாழ்ந்த வேலைகளைச் செய்கிறார்கள்அவர்களே பிராமணர்கள் சாப்பிட்டபின் இலைகளை எடுத்து அப்புறப்படுத்துகிறார்கள்அவர்கள் இலைகளை வெளியே கொண்டுபோய் மொத்தமாக நாயர்களுக்கு விற்று விடுகிறார்கள்நாயர்கள் எச்சிலைகளில் உள்ளவற்றையெல்லாம்அவற்றின் சீர்கேட்டைச் சொல்ல வேண்டியதில்லைநன்றாகக் கலந்து கடைத் தெருவுக்குக் கொண்டுபோய் பகிரங்கமாக விற்கிறார்கள்நகர பரிபாலன சபைக்கும் இந்த எச்சிலை லாபத்தில் பங்கு உண்டுஒரு பிராமண போஜனத்தில் வரும் எச்சிலையால் வாரியருக்குச் சுமார் 10 ரூபாய் லாபம் கிடைக்கும்.

வாரியர்களிடமிருந்து வாங்கி விற்கும் நாயர்களுக்கு இன்னும் அதிக லாபம் கிடைக்கும்சில காலத்திற்கு முன் தெய்வபக்தியுள்ள உயர்வகுப்பார் பலர்இதனை வாங்கித் தங்கள் நோய் தீருமென்று உட்கொண்டு வந்தார்கள்ஆனால்இப்பொழுது பக்தியை விடப் பசி காரணமாகவே தாழ்ந்த வகுப்பு ஜனங்கள் இந்த எச்சிலைகளை வாங்கி உண்கிறார்கள்மலையாளத்து பிராமணர் கூற்றைத் தயவுசெய்து திருத்தவேண்டும்.

இதுபோன்ற சமூகக் கொடுமைகள் இன்று தலைதூக்காமல் இருப்பதற்குத் தந்தை பெரியாரின் தணியாத போராட்டம்தான் காரணம். (தந்தை பெரியார் 132ஆம் ஆண்டு பிறந்தநாள் விடுதலை மலர் - பக்கம் 242)

                கே.ஆர்.நாராயணனை சர்.சி.பி.ராமசாமி அய்யர் எப்படி நடத்தினார்தி இந்து  கே.ஆர்.நாராயணனை சர்.சி.பி.ராமசாமி அய்யர் எப்படி நடத்தினார்இந்தியத் துணைக் கண்டத்தின் முதல் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த குடியரசுத் தலைவர் கே.ஆர்நாராயணன், 2005 நவம்பர் 9 அன்று மறைவுற்றார். 21 குண்டுகள் முழங்க அந்த மனிதருக்கு இறுதி மரியாதையை இந்திய அரசு கொடுத்ததுஇந்த முதல் குடிமகன் என்ற சமூக அந்தஸ்தை அவர் எப்படிப் பெற்றிருப்பார்அதற்காக அவர் நடத்திய போராட்டங்கள் எப்படி இருந்திருக்கும்வடுக்களையும் அவமானங்களையும் கடந்து அவர் நடந்த முட்பாதை:
நான் பல்கலைக் கழகத்தில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றேன்திருவிதாங்கூர் மகாராஜா சி.பிராமசாமி (அய்யர்என்னை அழைத்தார்நீ ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் சேர்ந்து உயர்படிப்பு படிக்க வேண்டும்நான் உன்னை அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னார்அவர் டெல்லியிலிருந்து திரும்பியதும் மீண்டும் அவரை சந்திக்கும்படி கூறினார்ஆனால்அவர் திரும்பி வந்தபோதுஅவர் மனநிலை மாறியிருந்ததுநான் உன்னிடம் சொன்னதை மீண்டும் பரிசீலனை செய்தேன்உன்னை ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்திற்கு அனுப்புவதற்கு பதில்உனக்கு அரசு வேலை தருகிறேன் என்றார்.

அவருடைய மாறிய இம்மனநிலையைக் கண்டு நான் அதிர்ந்து போனேன்அய்யா அதற்குப் பதிலாக நீங்கள் எனக்கு விரிவுரையாளர் வேலை கொடுப்பீர்களாஎன்று கேட்டேன்அவர் கோபமடைந்து கத்தினார்அப்படியெனில்உன் முகவரி மற்றும் பிற தகவல்களை என்னுடைய உதவியாளரிடம் கொடுத்துவிட்டுப் போ என்றார்பல்வேறு பிரச்சினைகளுக்குக் காரணம் ஜாதிதான் என்பதை நான் உணர்ந்தேன்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பாதுகாவலர் ஒருவருடன் நான் மாலையில் நடைப்பயிற்சியின்போது சந்தித்து உரையாடுவேன்ஒருநாள் அவர் என்னைப் பார்த்துக் கேட்டார்திவான் என்ன சொன்னார்அவர் உனக்கு உதவுவதாக இல்லை என்று கேள்விப்பட்டேனே என்றார்திவான் இப்படிச் சொன்னார்சில்க் ஜிப்பாதங்கக் கடிகாரத்துடன் என்னை வந்து சந்தித்த அந்த அரிஜன பையன் யார்நான் சொன்னேன்அய்யா என்னிடம் சில்க் ஜிப்பாக இல்லைஅது எனக்குச் சொந்தமானதும் அல்லநான் காதி உடை மட்டுமே அணிவேன்நான் காந்தியாரைப் பின்பற்றுகிறேன்இந்தக் கடிகாரம் தங்கம் அல்லஅது தங்க முலாம் பூசப்பட்டதுஇதை எனக்கு ஒரு நண்பர் அன்பளிப்பாகக் கொடுத்தார்திவான் இப்படி ஒரு அற்பமான மனிதராக இருப்பார் எனில்  அவரிடமிருந்து எனக்கு எந்த உதவியும் வேண்டாம்.

என்னுடைய வாழ்க்கையில் அது ஒரு துயரமான காலகட்டம்என்னுடைய இரு அண்ணன்களும் தொடர்ந்து காச நோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டனர்மிகவும் துன்பகரமான நாட்கள் அவைஅநீதியைக் கண்டு எப்போதும் நம் ரத்தம் கொதிக்கும்கோபத்தையும் துயரத்தையும் நாம் கட்டுப்படுத்த முடியாதுஉனக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டு நீ கோபப்படவில்லையாஎன்றார் அவர்திவான் என்னை நிலைகுலைய வைத்துவிட்டார்நான் கோபமடைந்தேன்நான் ஒரு தாழ்த்தப்பட்டவன் என்பதால்தான் அவர் என்னிடம் அப்படி நடந்து கொண்டார்நான் காந்திய வழியில் ஈர்க்கப்பட்டிருந்ததால் நான் அவரிடம் வெறுப்பை வளர்த்துக் கொள்ளவில்லைநான் என்னை ஒருபோதும் ஒடுக்கப்பட்டவனாகவோநசுக்கப்பட்டவனாகவோதுன்புறும் தலித்தாகவோ எண்ணியதில்லைபல நல்ல மனிதர்கள் எனக்கு உதவி புரிந்துள்ளனர்நான் அதைப் பயன்படுத்திக் கொண்டேன்.


டாக்டர் கே.ஆர்நாராயணன் அவர்கள் மாரி மார்செல் தெக்கேகரா என்பவரிடம் பகிர்ந்து கொண்டவை.                                         
        - (தி இந்து 22-4-2005)

நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...