அய்ங்குறுநூறு கவிதை
பார்ப்பனர் தலையின் உச்சுக்குடுமி
``அன்னாய் வாழி வேண்டன்னை நம்மூர்ப்
பார்ப்பனக் குறுமகப் போலத் தாமுங்
குடுமித் தலைய மன்ற
நெடுமலை நாட னூர்ந்த மாவே! (அய்ங்குறுநூறு)
``அம்மா, அவர்,
குதிரை மீதேறி வருகிறார் கெம்பீரமாக!
``யாரடி, வருவது?
``பெரிய மலைகள் சூழ்ந்த நாட்டுக்குடைய தலைவர் பரிமீதேறி வருகிறார்.
``சரி அதிலென்ன வியப்புக் காண்கிறாய்?
``அந்தக் குதிரை, தலையை அசைத்துக்கொண்டு வருகிறதே, அது வேடிக்கையாக இருக்குதம்மா!
``அந்தக் குதிரை, தலையை அசைத்துக்கொண்டு வருகிறதே, அது வேடிக்கையாக இருக்குதம்மா!
``அதிலென்னடி வேடிக்கை! மகாவேடிக்கை!
குதிரை தலையை அசைக்கும்போது கொத்தாக இருக்கும் குடுமியும் கூடவே கூத்தாடுகிறது. அதைப் பார்த்தால், சிரிப்புண்டாகிறது!
``குதிரைக்குத் தலையிலே குடுமி ஆடினால், சிரிப்பு வரக் காரணம் என்னடி?
``ஏனம்மா! நமது ஊரிலே உள்ள பார்ப்பனர் தலையின் உச்சுக்குடுமி, அவர்கள் நடக்கும்போது கூத்தாடுகிறதே, அதைப்போல இல்லையா அந்தக் காட்சி? அதனால்தான், எனக்குச் சிரிப்பு உண்டாயிற்று!
``போடி குறும்புக்காரி
வீதிவழியே செல்லுகிறான் குதிரை வீரன்; குதிரை தலையசைக்க, அதன் குடுமி ஆடுகிறது. இதைக்கண்ணுற்ற தோழிக்குப் பார்ப்பனரின் குடுமி நினைவிற்கு வருகிறது. நகைக்கிறாள்!
கண்டதையும் கொண்ட கருத்தையும், தலைவிக்குக் கூறுகிறாள் பழந் தமிழகத்திலே. இக்கருத்துக்கொண்ட கவிதையே, மேலே குறித்திருப்பது, அய்ங்குறு நூறு எனும் ஏட்டிலுள்ளது,
நூல் : ஆரியமாயை
ஆசிரியர் “ அறிஞர் அண்ணா
கண்டதையும் கொண்ட கருத்தையும், தலைவிக்குக் கூறுகிறாள் பழந் தமிழகத்திலே. இக்கருத்துக்கொண்ட கவிதையே, மேலே குறித்திருப்பது, அய்ங்குறு நூறு எனும் ஏட்டிலுள்ளது,
நூல் : ஆரியமாயை
ஆசிரியர் “ அறிஞர் அண்ணா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக