ஞாயிறு, 16 ஜூலை, 2017

டார்வின்


மதத்தின் கருத்தை மண்மூடச் செய்து, குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்ற உண்மையை அறிவியல் கண் கொண்டு நிலை நிறுத்திய டார்வின் சார்லஸ் ராபர்ட் (1809 -1882) பிறந்த நாள் இந்நாள்.

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் படித்தவர். தாவரவியல், விலங்கியல் துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டவர்.

1859 இல் அவரால் எழுதப்பட்ட உயிர் இனங்களின் தோற்றம்  என்ற என்ற நூலும், 1871 இல் எழுதப்பட்ட மனிதனுடைய பாரம்பரியம்  என்ற நூலும் மானுட வரலாற்றில் மகத்-தான அதிர்ச்சிக்குரிய சிந்தனைக் கருவூலங்கள் ஆகும்.

இயற்கையானதுஎந்த உயிர் தன் சூழ்நிலையில் வாழ்வதற்கு மிகவும் அனுகூலமான மாறுபாடுகளை உடையதோ, அந்த உயிரைத் தேர்வு செய்து கொள்கிறது. இவ்விதமான இயற்கைத் தேர்வு தொடர்ச்சியாகவும் வழிவழியாகவும் நடந்து வருவதால், சூழ்நிலையிலே எவ்வளவுக்கு வேறுபாடுகள் உண்டாகியிருக்குமோ, அவ்வளவுக்கு வேறுபட்ட விலங்கினங்களும் தோன்றிக் கொண்டு வரும் என்று அரிதின் ஆய்வு செய்து கண்டறிந்தார் விஞ்ஞானி டார்வின்.

படின உசநயவநன ஆய  ளை டிற அயபந - தன்னைப் போலவேதான் தேவன் மனிதனைப் படைத்தான் என்ற பைபிளின் வேதமொழியிலிருந்து இது வேறுபாடானது என்ற நிலையில்மவுடீக மத உலகம் மத நிந்தகன், நாத்திகன் என்று மாபழி சுமத்தி ஆர்ப்பரித்து எழுந்தது.

கடவுளைக் கவிழ்க்க வந்த சதி, ஆபாசமும், நஞ்சும் கலந்த துர்க்காற்று என்று தூற்றினர்.

விஞ்ஞானி டார்வினின் ஆய்வு அறிவு பூர்வமானது என்று சொன்னதற்காக கொலம்பியா  மதக்கல்லூரி பேராசிரியர் டாக்டர் உட்ரோ 1884 இல் வேலையிலிருந்து தூக்கி எறியப்பட்டார்.

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட 1925 இல் அமெரிக்காவின் தென்னசி மாநிலத்தில் டார்வினின் பரிணாமக் கொள்கையைப் போதித்ததற்காக ஸ்கோயஸ் என்னும் ஆசிரியர் நீதி மன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டார். 1950 இல் கூட வாடிகனின் 12 ஆவது போப் பரிணாமக் கொள்கையைப் பலமாக எதிர்த்தார்.

ஆனாலும் ஆம், ஆனாலும், பகுத்தறிவு முன் மதம் மண்டியிட்டே தீருமே! 1996 இல் இருந்த போப் (ஆண்டவர்) ஜான் பால் பகிரங்கமாக ஒரு உண்மையை ஒப்புக் கொண்டு அறிவித்தார்.

ஃபோன்டிபிகல் அகாடமி ஆஃப் சயின்ஸ் என்ற அமைப்பிற்கு அவர் அனுப்பிய செய்தியில் புதிய அறிவு, பரிணாம வளர்ச்சித் தத்துவத்தினை அங்கீகரிக்கச் செய்கிறது. டார்வினின் கொள்கை-களை பள்ளிகளில் போதிக்க வேண்டும் என்று கூறினார். (கூந ழனேர-- 26.10.1996)

இறுதி வெற்றி யாருக்கு? ஆன்மிகத்துக்கா? அறிவியலுக்கா?

குறிப்பு: கடந்த ஆண்டு டார்வின் 200 ஆம் ஆண்டு விழாவை திராவிடர் கழகம் பகுத்தறிவாளர் கழகம் சிறப்பாகக் கொண்டாடியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

12.2. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 3,


ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...