ஞாயிறு, 16 ஜூலை, 2017

திராவிட வெறுப்பு


தமிழ் செம்மொழிபற்றி முதலமைச்சர் கலைஞர் அவர்கள் முரசொலியில் அரிய தகவல்களைக் கொண்ட தொடர் கட்டுரைகளை எழுதி வருகிறார்ஆறாவது கட்டுரையில் ஒரு முக்கிய வரலாற்றுக் கருத்தினைப் பதிவு செய்துள்ளார்.

மத்திய ஆட்சியில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பெரும்பங்கு வகித்து வந்த பா...வில்முரளி மனோகர்ஜோஷி போன்ற முன்னணித் தலைவர்கள் சிலர்திராவிட மொழிக் குடும்பத்தின்மீது இருந்த தீராத வெறுப்பின் காரணமாகதமிழ் செம்மொழியென அறிவிக்கப் பட வேண்டுமெனும் கோரிக்கை தொடர்பாகக் கொண்டிருந்த எதிர் மறையான அணுகுமுறையும்காட்டிய தாமதமும் தமிழ் செம்மொழி அறிவிப்பைத் தள்ளிப் போடச் செய்தன என்ற நிகழ்வினை வர லாறு கருத்தில் எடுத்துக் கொண்டுள்ளது என்பதை மறுத்திட இயலாது (முரசொலி, 30.12.2009) என்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

தமிழை நீச்ச பாஷை என்று சொல்லும்கருதும் கூட்டத்தினைச் சேர்ந்தவர்கள் இவர்கள்அதன் காரணமாகவே இந்த வெறுப்பும்எதிர்ப்பும்!

திராவிட மொழிக் குடும்பத்தின் மீது இவர்களுக்கு இருந்த தீராத வெறுப்பு என்று கலைஞர் அவர்கள் குறிப்பிட்டது ஏதோ ஒரு கோப உணர்வாலோகுற்றம் சாற்றவேண்டும் என்ற எண்ணத்தாலோமேம்போக்காகவோ கூறப்பட்டதல்ல.

இது ஒரு துல்லியமான வரலாற்று ரீதியான கருத்து என்பதற்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டை எடுத்துக்கூறினாலே போதுமானது.

உலகளாவிய திராவிட மொழியியற் பள்ளி (ஐவேநசயேவடியேட ளுஉடிடிட டிக னுசயஎனையை டுபேரளைவஉளதிருவனந்தபுரத்தில் இயங்கி வருகிறதுஇதன் தோற்றுநர் திராவிட மொழிப் பேரறிஞரும்தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தருமான டாக்டர் வி.அய்சுப்பிரமணியம் ஆவார்மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரும்பார்ப்பனருமான முரளிமனோகர் ஜோஷியைச் (பா...) சந்தித்துதிராவிடியன் என்சைக்ளோபீடியா என்ற நூலை அன்பளிப்பாகத் தந்தார்.

நூலைப் பெற்றுக்கொண்ட ஜோஷிஇந்நூலின் பெயரில் உள்ள திரவிடியன் என்ற சொல்லை நீக்கிவிடலாமன்றோ என்றார்.

இதற்குப் பேராசிரியர் டாக்டர் வி.அய்சுப்பிரமணியம் அவர்கள் அளித்த பதில்தான் மிகமிக மிக முக்கியமானதும்அவரின் அறிவு நாணயத்துக்கும்அஞ்சாமைக்கும் கட்டியம் கூறுவதும் ஆகும்.

ஜனகனமன நாட்டுப் பண்ணிலிருந்து திராவிடம் என்ற சொல்லை நீக்கி விடுங்கள்நானும் திராவிடக் களஞ்சியம் என்பதிலிருந்து திராவிடம் என்ற பெயரை நீக்கிவிடுகிறேன் என்றாரே பார்க்கலாம். (னுடுஹ சூநறளபிப்ரவரி 2003).

மானமிகு கலைஞர் அவர்கள் பா...வினர்மீது வைத்த குற்றச்சாற்று மிகமிக மிகச் சரியானது என்பது இப்பொழுது விளங்கவில்லையா?

31.12.2009 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,


ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...