ஞாயிறு, 16 ஜூலை, 2017

துளசி


துளசிகுத்துச்சண்டை வீராங்கனை துளசிபற்றி நாளேட்டில் ஒரு தகவல் வெளிவந்துள்ளது. படித்தால் கண்களில் இருந்து குருதிதான் கொட்டும்.

வறுமையின் தேள் கொட்டப்பட்ட குடும்பம் பத்தாம் வகுப்புக்குமேல் படிக்க வாய்ப்பும் இல்லை.
சிறுவயதிலேயே குத்துச்சண்டையில் மிக ஆர்வம். முறையாகப் பயிற்சிப் பெற வசதி-யில்லை. பயிற்சிக்குத் தேவையான கருவிகள் இல்லை.

அவரைச் சுற்றி இல்லைகள் என்பது ஏராளம். ஆனாலும், இந்த இல்லைகளைத் தாண்டி இந்தத் துளசியிடம் தன்னம்பிக்கை என்னும் செல்வம் பலமாகவே இருக்கிறது.

2009 ஆம் ஆண்டில் இந்திய அளவில் குத்துச்சண்டையில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார். மாநில அளவில் முதல் இடத்தையும் தட்டிச் சென்றுள்ளார்.

இந்திய அணிக்காக உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ள வாய்ப்பு வந்தும், அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. காரணம் வறுமை பணத்துக்கு எங்கே போவது?

குத்துச்சண்டை என்ன, கிரிக்கெட் விளையாட்டா? சூதாடுவதற்கும், பண மழை கொட்டுவதற்கும்?

ஒரு நாள் உள்நாட்டில் விளையாடினால் ரூ.1.60 லட்சம்; வெளிநாட்டில் விளையாடினால் ரூ.1.85 லட்சம். இது அல்லாமல் கிரிக்கெட் வாரியம் ஆண்டு ஒன்றுக்கு ஒரு கிரிக்கெட்காரருக்கு அளிக்கும் சம்பளம் ரூ.50 லட்சம். இவையல்லாமல், விளம்பரங்கள்மூலம் கொட்டுவது. பண மழையல்ல  வெள்ளம்!

ஆறு ஓட்டம் எடுத்தால் அதற்கொரு கொசுரு தொகை. பந்தைப் பிடித்தால் அதற்கொரு பரிசு. ஓட்டம் எடுப்பதற்கும், பந்தைப் பிடிப்பதற்கும்தானே விளையாடப் போகிறார்கள்? அதன்பின் என்ன ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ரேட்?

இவ்வளவுக்கும் குத்துச் சண்டையில் தனி மனிதர் சாதனை என்று சொல்லுவதுபோல கிரிக்கெட்டில் இடம் இருக்கிறதா?

பார்ப்பான் எதில் நுழைந்தாலும், அவனுக்குத்தான் முதல் பந்தி சகல சவுபாக்கியங்களும்!
சூத்திரப் பெண் துளசிக்கு இதெல்லாம் எங்கே தெரியப் போகிறது? தெரிந்திருந்தால் குத்துச் சண்டைக்கா போயிருப்பார்?

23.4. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3


நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 3,


ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...