ஸ்ரீலால்பகதூர் சாஸ்திரி அவர்கள் பெயருக்குப் பின்னால் வரும் சாஸ்திரி என்ற பட்டப் பெயர் அவருடைய சாதியைக் குறிக்கும் சொல்லாகவோ குடும்பப் பெயராகவோ சாதாரணமாகக் குறிப்பிடப்படவில்லை என்பதையும், காசி வித்யாபீடத்தில் அவர் சாஸ்திரங்களைப் படித்துத் தேர்வு பெற்றதாக அவரால் பெறப்பட்ட படிப்புப் பட்டமே! என்பதையும் முதலில் மக்கள் அறியச் செய்ய வேண்டியது அவசியமாகிறது.
அவர் சாதாரண லால்பகதூரே ஆவார். பி.ஏ.,
எம்.ஏ.,
போன்ற படிப்புப் பட்டங்களைப் பெற்றவர் போன்றே இவர் வித்யாபீட சாஸ்திரி ஆவார். திரு. சாஸ்திரி என்று குறிப்பிடுவதும் திரு பி.ஏ.,
திரு எம்.ஏ. என்று குறிப்பிடுவது போன்றதாகவே ஆகும்.
மற்றும் லால்பகதூர் என்பதில் உள்ள பகதூர் என்பதும் ஒரு பட்டமோ அல்லது தகுதி காட்டும் கவுரவமோ அல்ல. அது அவரது சொந்த பெயரே ஆகும் என்று சி.ஆர்.
என்ற கையொப்பம் இட்டு எழுதினார். (சுயராஜ்யா 1.2.1964)
இதன் பொருள் என்ன? சாஸ்திரி பூணூல் போட்ட நம்பளவாள் அல்ல;
ஏமாந்து விடாதீர்கள் என்று பார்ப்பனர்களுக்கு அடையாளம் காட்டும் அசல் அக்ரகார குணம்தானே!
நூல் : பார்ப்பன புரட்டுக்குப்பதிலடி
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : பார்ப்பன புரட்டுக்குப்பதிலடி
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக