திங்கள், 14 ஆகஸ்ட், 2017

மேடைக்கு அழைக்கிறேன்...பதில் சொல்லட்டும்!



திராவிடன் - சூத்திரன்.  திராவிடப் பெண் - சூத்திரச்சி.  ஆரியர் வீட்டு வேலைக்காரர்கள், அத்தனை பேரும் திராவிட (சூத்திர)ர்கள்.  மற்றும் திராவிடப் பழம் பெருங்குடி மக்கள் ஈயத்தில் கண்ணாடிக் கல்லில் நகைபோடுவது.  ஆரியர்கள் இன்றைக்கும் பிச்சை எடுத்தாலும் வைரம், செம்பு, பொன் நகைகள் போடுவது.  திராவிடர்கள் 100க்கு 90   பேர்கள் தற்குறி.  ஆரியர்கள் 100க்கு 90 பேர்கள் படித்தவர்கள், மகாபண்டிதர்கள்.      திராவிடர்கள் உத்தியோகத்தில் 100க்கு 90 பேர்கள் பியூன்கள், போலீசு, காவலர்கள்,    தோட்டி தலையாரிகள், ஆரியன் பிச்சை எடுத்தாலும் அய்.சி.எஸ். ஆரியர்கள் 100க்கு  90 உத்தியோகங்களில் கலெக்டர்கள், சூப்பிரண்டுகள், ஹைகோர்ட் ஜட்ஜுகள் முதலிய பெரும் பெரும் பதவிகள் ஆகிறான்.  திராவிடன் ஜமீன்தாரனாய் இருந்தாலும் அவன்  மகன் தெருவில் காவாலியாய்க் காலியாய் ஆரிய அடிமையாய்த் தற்குறியாய் மடையனாய்த் திரிகிறான். திராவிட மிராசுதாரர்கள் மக்கள் எல்லாம் தற்குறியாய் மூட்டை தூக்குகிற  நிலைமைக்குப் போகிறார்கள்.  இந்த நிலைமைக்குக் காரணம் என்ன?  திராவிடன் சிந்திக்க வேண்டாமா என்று கேட்கிறேன்.  கடவுள் பக்தியயன்று கொட்டையும் சாம்பலும் மண்ணும் அணிந்துகொண்டு பார்ப்பான் பின்பாகத்தைப் பார்த்துக்கொண்டு நின்று கும்பிட்டு அவன் கால்தூசியைச் சடகோபமாகக் கொண்டு கடவுள் பக்தனாவது போல்,    பார்ப்பானுக்குப் பின்னால் நின்று கொடியைப் பிடித்து அவனுக்கு ஜே போட்டு தேசபக்தனாகக் காட்டிக்கெள்ளும் மானமற்ற திராவிடனைக் கேட்கின்றேன்.  இதோ மேடைக்கு அழைக்கிறேன். வந்து பதில் சொல்லட்டும்.



-  குடிஅரசு, 10-1-1948

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...