சூத்திர சாதி என்பதால் நாம் பார்ப்பானுக்கு உழைத்துப்போட வேண்டியவர்கள். பார்ப்பனர்கள் என்பதால், அவர்கள் எல்லாவற்றையும் தங்கள் வயிற்றுக்கே வாய்க்கால் வெட்டி விட்டு உயர் வாழ்வு வாழ்கிறவர்கள். இன்னும் சொல்லப்போனால், சாதி உட்பிரிவுகள் இருக்கின்றனவே, அவைகள் எதற்காக ஏற்படுத்தப்பட்டன? பார்ப்பன பாஷைப்படி எடுத்துக் கொண்டால்கூட, தொழிலுக்குத்தானே சாதிப் பிரிவு? பறையடிக்கிறவன் - பறையன்; வெளுப்பவன் - வண்ணான்; மண்பாண்டம் செய்கிறவன் - குயவன். ஆனால், வேதம் ஓதுகிறவர் - அய்யர், இப்படித்தானே! இதில் பார்ப்பனரைத் தவிர மற்றையோரெல்லாம் உடலுழைப்புக்காரர்கள். சாதியின் முறைப்படியே சமுதாயத்தின் அமைப்புப்படியே! எனவேதான் சொல்லுகிறேன் - இன்றைய அமைப்பு முறை, பேதத் தன்மை, ஏழ்மை - உயர்வு நீங்க வேண்டுமென்றால் இந்த நாட்டிலே முதலாளியை ஒழித்தால் மட்டும் போதாது. பார்ப்பன உயர்வுத் தன்மை, அதற்குக் கடவுள் மத சாஸ்திரத்தின் மீது கட்டப்பட்டுள்ள பலமான பாதுகாப்பு - இவைகளை ஒழித்தால்தான் முடியும்.
(குளித்தலை, வதியத்தில் சொற்பொழிவு, "விடுதலை' 2.7.1952)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக