கேள்வி: தமிழ்ச் சமுதாயம் முன்னேற ஜாதி உணர்வை அகற்றவேண்டும் என்ற கருணாநிதியின் யோசனை குறித்து?
பதில்: நீதிபதி தினகரன் முதல் மத்திய அமைச்சர் ராஜா வரை குற்றம் சாற்றப்பட்டவர்களின் ஜாதியை முன்னிறுத்தி வாதம் புரிகிறவருக்கு,
இப்படியும் பேச மனம் வருவது ஒரு விசித்திரம் தான். தான் என்ன பேசினாலும் மக்கள் ஏற்பார்கள் என்ற நினைப்பு முதல்-வருக்கு முழுமையாக வந்து-விட்டது. (துக்ளக் 24.2. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3)
இப்படி எழுதுகிறவர் யார் தெரியுமா? ஆண்டுதோறும்
பூணூலைப் புதுப்பித்துக்கொள்கிற சோ ராமசாமி தான்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நீதிபதி தினகரன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த நேரத்திலும், கருநாடக மாநிலத் தலைமை நீதிபதியாக இருந்த நேரத்திலும் அவர் மீது பாயாத குற்றச்சாற்று, அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் போகிறார் என்றவுடன் அக்கிரகாரத்து அம்மிக்குழவி ஆகாயத்தில் பறப்பது ஏன் என்பதுதான் நமது கேள்வி.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ராமச்சந்திர அய்யர் வயதைத் திருத்தி பதவியை நீட்டிக்கொண்டபோது, நேர்மையான முறையில் பார்ப்பனர்கள் எதிர்த்திருந்தால் அவர்களுக்கு ஜாதிப் புத்தி இல்லை போலும் என்று நினைத்திருக்கலாம், கண்டு கொள்ளவில்லையே.
கொலைக்குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டு 61 நாள் சிறையில் இருந்தவர் காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திர சரஸ்வதி, அவரைப் பற்றி ஊரு உலகத்துக்கே தெரியும்.
இருந்தும் கொலை வழக்கில் சங்கர மடத்துக்கு அநீதி நடந்துள்ளது என்று இந்தியா டுடேக்கு (9.2.2005) பேட்டி கொடுத்தாரே, திருவாளர் சோ இதற்குப் பெயர் ஜாதிப் புத்தி இல்லாமல் வேறு என்ன புத்தியாம்?
வீரமணியிடம் சோவை நான்தான் அனுப்பினேன். நான் தயாரித்த கேள்விகளைத் தான் சோ வீரமணியிடம் கேட்டார் என்று சின்னக்குத்தூசியிடம் ஜெயேந்திர சரஸ்வதி சொன்ன குட்டை எதிரொலி ஏட்டிலே (3.4.1983) சின்-னக்குத்தூசி போட்டு உடைத்துவிட்டார். மற்றவர்களுக்குக் கையாளாக செயல்படக் கூடியவர் சோ என்று அம்பலமானதும், உயிர் நாடியில் தேள் கொட்டியது போல துடிதுடித்தார் சோ.
நியாயமாக சோ என்ன செய்திருக்க வேண்டும்?. சங்கராச்சாரி சொன்னது உண்மைக்கு மாறானது என்றால் அவரிடம் சண்டைக்குத் தானே போயிருக்க வேண்டும்?.
அவாளின் ஆதர்ஷப் பெரியவாளாயிற்றே! என்ன எழுதினார் சோ?.
இப்பொழுது நான் ஒரு தர்மசங்கடமான நிலையில் இருக்கிறேன். சுவாமிகள் சொன்னது சரியல்ல என்று நான் மறுத்தே ஆக வேண்டும். பட் அய் ஹேவ் ரெஸ்பெக்ட் ஃபார் தட் இன்ஸ்ட்டிட்யூஷன் என்றாரே பார்க்கலாம்.
மறுக்க வேண்டிய இடத்தில் மறுக்காததோடு அந்த மடத்தினிடத்தில் மரியாதை வைத்துள்ளேன் என்றாரே! இதற்குப் பெயர் என்னவாம்?.
இந்த ஜாதிப் புத்தியும், இனவெறியும் கொண்டவர்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வக்காலத்து வாங்கும் கலைஞரைத் தூற்றுகிறார்.
22.2. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 3,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக