ஞாயிறு, 16 ஜூலை, 2017

சமஸ்கிருத ஆட்சி


ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் கோல்வாக்கர்  சத்தியமூர்த்தி அய்யர்
மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வுதான் இருக்கிறது. சமஸ்கிருதம் ஆட்சி மொழியாக வருகின்ற காலம் வரை இந்திக்கே நாம் முன்னுரிமை தந்து நமது வசதிக்காக ஆட்சி மொழியாக்கிக் கொள்ள வேண்டும். ஆர்.எஸ்.எஸ். நிறுவனர்  கோல்வாக்கர்  (Bunch of Thoughts) -_ அத்தியாயம்பக்கம் 113)

தொழிலாளர்களின் மிகப் பெரிய தலைவர் என்றும் முற்போக்குப் பேர்வழி என்றும் பார்ப்பனர்களால் பரணில் வைத்துக் கூத்தாடப்படும் முன்னாள் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி என்ன சொன்னார் தெரியுமா?
சமஸ்கிருதம் நாட்டு மொழியாக ஆக்கப்பட்டால் மொழிப் பிரச்சினையே இருக்காது. இதை நான் 1955 முதல் பிரச்சாரம் செய்து வந்திருக்கிறேன் என்று பேசினார்!
(சிலப்பதிகார சமஸ்கிருத மொழி பெயர்ப்புப் புத்தக வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரையிலிருந்து 2-.1.-1963).

நான் சர்வாதிகாரியாக இருந்தால் சமஸ்கிருதத்தைக் கட்டாயப் பாடமாகப் படிக்கச் செய்வேன் என்று சொன்னவர்தானே திருவாளர் சத்தியமூர்த்தி அய்யர் (மெயில் 25.-1.-1938)

நூல் : பார்ப்பன புரட்டுக்கு பதிலடி

ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...