ஞாயிறு, 16 ஜூலை, 2017

பழந் தமிழகத்தின் கல்வி ஓடையில் பார்ப்பன முதலைகள்


இந்த நாட்டு மன்னர்கள் அன்றைக்குக் கல்வியை வளர்க்கிறோம்; மக்களுக்குக் கல்வியைக் கற்றுத்தரப் பள்ளிகளை நிறுவுகிறோம் என்ற பெயரில் வேதக் கல்வியாம் சனாதனத்தையும், பார்ப்பன மாணவர்களையும் வளர்த்து வந்தனர்.

இந்த மன்னர்களின் ஆதரவிலும் கோவில் வருவாயிலும் இந்தப் பார்ப்பனக் கூட்டம்தான் படித்து வந்தது; பயன்பெற்று வந்தது; சுகத்தை அனுபவித்து வந்தது.

இந்த நாட்டுக்கே உரிய தமிழினத்துப் பிள்ளைகளுக்கு இந்த வாய்ப்புகளும் வசதிகளும் கொடுக்கப்படாத கொடுமைகளும் அநீதிகளும் இங்கு நிலவிவந்துள்ளன.

சில கல்வெட்டுச் செய்திகளைத் தருகிறோம்.


திருமுக்கூடல் கோவில்...

திருமுக்கூடல் என்னும் ஊரில் இருந்த வெங்கடேசப் பெருமாள் கோவிலில் - நான்கு வேதங்களைக் கற்பிக்க என்றே ஒரு வேதக் கல்லூரி நிறுவப் பெற்றிருந்தது. இந்தக் கல்லூரியில் பயில்கின்ற பார்ப்பன மாணவர்கள் தங்கியிருக்க மாணவர் விடுதிகள் 2 கட்டப்பெற்றிருந்தன.

இந்தக் கல்லூரியில் நான்கு வேதங்கள், சாத்திரங்கள், சம°கிருத வியாக்கனங்கள் எனப்பட்ட வடமொழி இலக்கணங்கள் முதலியவை கற்றுத் தரப்பட்டன.

மாணவர் விடுதியில் தங்கிப் பயின்ற பார்ப்பனச் சிறுவர்களுக்கு சுவையான உணவு வழங்கப்பட்டது.

சனிக்கிழமை தோறும் எண்ணெய் நீராட நல்லெண்ணெய் தரப்பட்டது.

இத்தகவல்களை திருமுக்கூடல் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

(ஆதாரம் : நூல் : “கல்வெட்டில் வாழ்வியல்” ஆசிரியர்: டாக்டர் அ. கிருஷ்ணன்)

நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.புங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...