ஞாயிறு, 16 ஜூலை, 2017

வ.உ.சி.


கப்பலோட்டிய தமிழர் ..சிதம்பரனாரின் நினைவு நாள் இந்நாள் (1936).

சுதந்திரப் போராட்டம் என்று கூறப்படுகிறதே, அதில் .. சிதம்பரனார் செய்த தியாகத்திற்கான தராசு தட்டின் எதிர்த்தட்டில் நிறுத்தி வைக்க இன்னொருவர் இந்தியாவில் பிறந்ததில்லை.

ஆனாலும், ..சி. சூத்திரர்தானே  அதனாலே அவரது தியாகம்கூட மலிவு சரக்காகிவிட்டது.

வெள்ளையனே வெளியேறு! என்ற தீரக் குரல் வெடித்துக் கிளம்பிய நேரத்தில், கட்சியை விட்டே வெளியேறியவர் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்அவருக்குத்தான் வெற்றிலைப் பாக்கு வைத்து அழைத்து முதல் இந்தியன் கவர்னர் ஜெனரல் என்ற மகுடம் சூட்டப்பட்டது; என்ன செய்வது, காந்தியாரின் சம்பந்தியாகவும் ஆகிவிட்டாரே!

இன்னொரு குறிப்பு குங்குமம் இதழ் பக்கம் 17 இல் (7.4.2000) வெளியானது.

1973-74 ஆம் ஆண்டில் ஆச்சாரியாரின் பென்ஷன் முதலியன குறித்த கோப்புகளைக் கண்ணுறும் வாய்ப்புள்ள ஒருவர் கூறியது:

ராஜாஜி அவர்கள் கவர்னர் ஜெனரலாக இருந்து ஓய்வு பெற்றார். தான் நெடுங்காலம் வாழப் போவதாகவும், அக்காலம் முழுவதும் தனக்கு வரவேண்டிய பணி ஓய்வு காலத் தொகைகளைக் கணக்கிட்டால் கிண்டி ராஜ்பவனத்தின் மதிப்பைவிடக் கூடுதலாக வரும் என்றும்; எனவே, அரசே கிண்டி ராஜ்பவன் நிலம் முழுதும் தனக்குக் கொடுத்துவிடவேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்தக் கோரிக்கையை அரசு நிராகரித்துவிட்டது என்பதுதான் குங்குமம் வெளியிட்டிருந்த அந்தத் தகவல்!

ஆச்சாரியாரின் தியாகத்தையும், சுதந்திரப் போராட்டத்துக்காக இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ..சி. தமிழரின் தியாகத்தையும் மனச்சான்று உள்ளபடியே உள்ளவர்கள் எடை போட்டுப் பார்க்கட்டும்!

தியாகத்தில்கூட பிராமணன் தியாகம்! சூத்திரன் தியாகம் என்கிற இரட்டை அளவுகோல் இருப்பதை எண்ணும்போது இதயத்தில் திடீர் தீ பிடித்தது போலவே தகிக்கிறது.

..சி. அவர்கள், தந்தை பெரியார் அவர்களிடத்திலும், சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சிகளின் நடவடிக்கைகளிலும் மிகுந்த மதிப்பும், ஈடுபாடும் கொண்ட மாந்தராகத் திகழ்ந்தார்கள்; பல நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு மடைதிறந்த தன் எண்ண நீரோட்டத்தையும் வெளிப்படுத்தியதுண்டு.

18.11.2009 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...