ஞாயிறு, 16 ஜூலை, 2017

இரண்டாம் உலகப் போர்

இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகள் தோற்று ஜெர்மனிக்காரன் ஹிட்லர் அச்சு நாடுகள் வெற்றி பெற்று இந்தியாவைப் பிடித்திருந்தால், இந்தியாவின் நிலை என்ன?

ஹிட்லர் ஆட்சி தேவையா? வெள்ளைக்காரன் ஆட்சி தேவையா? இருவரில் யார் குரூரன், கொடூரன்? பார்ப்பனர்களுக்கு ஹிட்லர் வரவேண்டும் என்று கொள்ளை ஆசை! ஏனெனில் ஆரியர்தான் உலகில் உயர்ந்த இனம் என்றும், ஆரிய ரத்தம்தான் சுத்தமான ரத்தம் என்றும் கூறும் நாஜிதான் ஹிட்லர்.

ஆரியப் பார்ப்பனர்கள் அடால்ப் ஹிட்லர் வரவேண்டும் என்று ஆசைப்பட்டதில் அதிசயமில்லை.

இயற்கை அன்னை ஆரியருக்குத்தான் அத்துணை வளங்களையும் கொடுத்திருக்கிறாள். அவ்வளவு மகத்தானவன் இந்த ஆரியன். எப்படி இந்த நிலையை  அடைகிறான் அவன்? மற்றவர்களின் உரிமையைப் பறிப்பதிலிருந்து பெறுகிறான். இதுதான் ஹிட்லரின் தாரக மந்திரம். அந்த ஆரிய இனத்தைச் சேர்ந்த இந்திய நாட்டுப் பார்ப்பனர்களும் அடுத்தவர்களின் உரிமை களைப் பறித்துத்தானே பளபளப்பாக வாழ்கிறார்கள்? நெற்றி வியர்வை நிலத்தில் விழுவது என்றால் என்னவென்று இவர்களுக்குத் தெரியுமா?

எப்படியும் ஹிட்லர்தான் வெற்றி பெறப் போகிறான் என்ற மோகத்தில் இந்நாட்டுப் பார்ப்பனர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? ஜெர்மன் மொழியை அவசரம் அவசரமாகப் படிக்க ஆரம்பித்தனர். இதனைப் பல பொதுக் கூட்டங்களில் தந்தை பெரியார் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

இந்திய அரசில் அதிகாரியாகப் பணியாற்றிய பெர்சிவல் ஸ்பீயர் என்பவர், 1981 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள தமது இந்திய நினைவுகள் என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்:

(1940 ஜூன் மாதம்) பிரான்ஸ் வீழ்ந்தபொழுது தென்னாட்டில் சில தந்திரக்காரப் பார்ப்பனர்கள் ஜெர்மானியர்கள் விரைவில் இந்தியாவைப் பிடித்துவிட இருப்பதால், அதற்குத் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்வதற்காக (வேறு எதற்கு?) ஜெர்மானியருடைய கைக்கூலிகளாக, கங்காணிகளாக இருக்கத்தான் ஜெர்மன் மொழியைக் கற்று வருவதாகச் சொல்லப்பட்டது.

(When France fall, some clever Brahmins in the south were said to be learning German to be ready for the forthcoming takeover. PP 74-75 of ‘India Remembered’ by Percival and Magaret Pear, Orient Longman, 1981)

பின்னர் 1942 முற்பகுதியில் இட்லரின் கூட்டாளிகளான ஜப்பானியப் போர் வெறியர்கள் சிங்கப்பூர் பர்மா ஆகியவற்றையெல்லாம் பிடித்து முன்னேறி வருகிறார்கள் என்றவுடன் அந்த ஜெர்மன் (!) பார்ப்பனர்கள்  ஜப்பானிய மொழியையும் படிக்கத் தொடங்கி விட்டார்களாம்.

(The ‘German Brahmins’ of Madras were indeed said now to be learning Japanese (after Pearl Harbour and fall of Singapore and Burma) - P 78 of the above book.)

பாவம். பார்ப்பனர்கள். அவர்களுடைய கூட்டாளிகளான ஜெர்மானிய, ஜப்பானிய போர் வெறியர்கள் இரண்டாம் உலகப் போரில் தோற்றுப்போய் விட்டனர் கடைசியாக! இவர் மட்டுமல்ல. அக்ரகாரத்து மனிதராகிய கல்கி கிருஷ்ணமூர்த்தி அலை ஓசை என்னும் நாவலிலும் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஹிட்லர் வெற்றி பெற்றுக் கொண்டிருந்தபோது, தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் ஜெர்மன் மொழியைப் படிக்கத் தொடங்கினார்கள் என்று!

நூல் : பார்ப்பன புரட்டுக்குப்பதிலடி

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...