இந்தியாவின் புகழ்பெற்ற தந்திரக்கலை (மேஜிக்) நிபுணர் பி.சி.
சர்க்கார். அவருக்கு மத்திய அரசு சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டுப் பெருமைப்படுத்தியிருக்கிறது. இதற்குமுன் பத்மசிறீ விருதும் வழங்கப்பட்டுள்ளது. அவர் மறைந்து எட்டாண்டுகளுக்குப்பின் கொல்கத்தா நகராட்சி ஒரு தெருவுக்கு இவரின் பெயரைச் சூட்டிச் சிறப்பு செய்தது.
இவர் செய்த தந்திரக் கலை என்பது மூட நம்பிக்கைகளைச் சார்ந்ததல்ல; அறிவியல் பூர்வமாகவே நடத்தி வந்தார்.
இவரது நிகழ்ச்சி என்பது
இசை, நடனம் உள்ளிட்ட பல கலை வண்ணங்கள் ஒளிரும் கலவையாகக் கண்டோரை ஈர்க்கும் சிறப்புத்தன்மை உடையது.
பணம் கொடுத்து அனுமதிச் சீட்டு வாங்கி மக்கள் ஆர்வத்தோடு ஓடோடிப் பார்க்கும் ஒரு நிலையை ஏற்படுத்தினார். அத்தகைய தந்திரக்கலை மன்னருக்கு நடுவண் அரசு இத்தகைய சிறப்பு செய்தது பாராட்டத்தக்கதாகும்.
கடவுள் சக்தியென்று கூறி, கையசைப்பில் பொருள்களை வரவழைப்பதாகக் கூறும் சாய்பாபாவை சந்திக்க பி.சி.
சர்க்கார் விரும்பினார். ஒவ்-வொரு முறையும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தன்னை அசாம் வியாபாரி என்று கூறிக்கொண்டு, தனக்கு ஆஸ்துமா நோய் நெடுநாளாக இருப்பதாகவும், சாய்பாபாவிடம் குணப்படுத்திக் கொள்கிறேன் என்று கூறிக்கொண்டு சாய்பாபா ஆசிரமத்துக்குள் நுழைந்துவிட்டார் பி.சி.
சர்க்கார். ஒவ்வொருவராகத் தரிசனத்துக்காக அழைத்தார் சாய்பாபா.
பி.சி.
சர்க்காரும் அழைக்கப்பட்டார். சாய்பாபாவைச் சுற்றி அவரைச் சேர்ந்த சீடர்கள் உட்கார்ந்திருந்தனர்.
அசாம் மொழி,
இந்தி மொழி ஆகியவற்றைக் கலந்து பேசினார் சர்க்கார். சாய்பாபாவால் அதனைப் புரிந்துகொள்ள முடியவில்லை. மொழி பெயர்ப்பாளரை அழைத்துக்கொண்டு வந்தனர் (அவர்தான் பகவான் ஆயிற்றே அசாம் மொழி தெரியாதது ஏனோ?)
உங்களுக்கு என்ன பிரச்சினை என்று கேட்டார் சாய்பாபா. ஆஸ்துமா வியாதி இருக்கிறது; அதைக் குணப்படுத்திக்கொள்ளவே இங்கு வந்தேன் என்றார் சர்க்கார். மந்திரத்தால் விபூதி கொடுத்து ஆசீர்வதிக்குமாறு வேண்டினார். கைவசம் வைத்திருந்த விபூதி தீர்ந்துவிட்ட நிலையில், ஒரு நிமிடம் சாய்பாபா திகைத்தார்.
சூ போட்டு சந்தனம் கொடுத்து ஆசீர்வதித்தார். பி.சி.
சர்க்காரே கடைந்தெடுத்த தந்திரக்கலை நிபுணர் ஆயிற்றே நடந்தது என்ன என்பதை நுனிப்பொழுதில் தெரிந்துகொண்டார்.
பலகாரத் தட்டு ஒன்றை எடுத்து வந்து சாய்பாபாவின் சீடர் அதில் சந்தனத்தையும் போட்டார்; அதை சர்க்காரும் கவனித்துவிட்டார் (பாம்பின் கால் பாம்பறியும் அல்லவா!) அவ்வளவுதான் பி.சி.
சர்க்கார் திடீரென்று சாய்பாபா செய்த அதே தந்திரத்தைக் கையாண்டு, ரசகுல்லா ஒன்றை வரவழைத்து சாய்பாபாவிடம் கொடுத்தாரே பார்க்கலாம் (பக்கத்தில் பலகார தட்டு இருந்தது அல்லவா!).
அவ்வளவுதான் வியர்த்து விறுவிறுத்துப் போய்விட்டார் சாய்பாபா; சீடர்கள் கூச்சல் போட்டு என்ன பயன்?
பகவானின் வேடத்தைக் கலைத்தெறிந்து கம்பீரமாக வெளியில் வந்தார் பி.சி.
சர்க்கார் (ஆதாரம்: இம்பிரிண்ட், ஜூன் 1983) என்ன,
பி.சி.
சர்க்காருக்கு அஞ்சல் தலை வெளியிட்டது சரிதானே!
27.2. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 3,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக