ஞாயிறு, 16 ஜூலை, 2017

பிராமணர்கள் நாட்டில் வாழக் கூடாது?

பிராமணர்கள் மாற வேண்டும் பிராமணர்கள் இந்த நாட்டில் வாழக் கூடாது என்றோ, இருக்கக்கூடாது என்றோ திராவிடர் கழகம் வேலை செய்யவில்லை.- திராவிடர் கழகத்தின் திட்டமும் அதுவல்ல. திராவிடர் கழகத்தினுடைய திட்டமெல்லாம் - திராவிடர் கழகமும், நானும் சொல்லுவது எல்லாம், விரும்புவது எல்லாம் - நாங்களும் கொஞ்சம் வாழவேண்டும் என்பதுதான். இந்த நாட்டிலே நாங்களும் கொஞ்சம் மனிதத் தன்மையோடு சமத்துவமாக இருக்க வேண்டும் என்பதுதான்.

இது, பிராமணர்கள் இங்கு வாழக்கூடாது என்று சொன்னதாகவோ, இந்த நாட்டை விட்டு அவர்கள் போய் விடவேண்டுமென்று சொன்னதாகவோ அர்த்தம் ஆகாது. அவர்களைப் போகச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அது ஆகிறகாரியம் என்று நான் கருதவுமில்லை. தவிரவும் பிராமணர்களுக்கும் நமக்கும் பிரமாதமான பேதம் ஒன்றும் இல்லை. அவர்கள் அனுசரிக்கிற சில பழக்க வழக்கங்களையும், முறைகளையும்தான் நாங்கள் எதிர்க்கிறோம். இது, அவர்கள் மனம் வைத்தால் மாற்றிக் கொள்வது பிரமாதமான காரியம் இல்லை.

நமக்கும் அவர்களுக்கும் என்ன பேதம்? இப்போது அவர்களும், நாமும் ஒரு குழாயிலே தண்ணீர் பிடிக்கிறோம். ஒரு தெருவிலே நடக்கிறோம்; ஒரு தொழிலையே இருவரும் செய்கிறோம். காலமும் பெருத்த மாறுதல் அடைந்து விட்டது. மக்களும் எவ்வளவோ முன்னேற்றமடைந்து விட்டார்கள். விஞ்ஞானம் பெருக்கம் அடைந்து விட்டது. இந்த நிலையில் நமக்குள் மனித தர்மத்தில் பேதம் இருப் பானேன்? ஆகவே, உள்ள பேதங்கள் மாறி, நாம் ஒருவருக்கொருவர் சமமாகவும் சகோதர உரிமையுடனும் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் நான் பாடுபடுகிறேன். நம்மிடையில் பேத உணர்ச்சி வரக்கூடாது என்பதில் எனக்குக் கவலை உண்டு. எனவே, முயற்சியில் பலாத்காரம் சிறிதும் இருக்கக்கூடாது என்பதிலும் எனக்குக் கவலை உண்டு. காலம் எப்போதுமே ஒன்றுபோல இருக்க முடியாது.

நம்மில் இரு தரப்பிலும் பல அறிஞர்களும், பொறுமைசாலிகளும் இருப்பதனாலேயே நிலைமை கசப்புக்கு இடமில்லாமல் இருந்து வருகிறது. இப்படியே என்றும் இருக்கும் என்று நினைக்க முடியாது. திராவிடர் கழகப் பின் சந்ததிகளும், பிராமணர்களின் பின் சந்ததிகளும் இந்தப்படியே நடந்து கொள்வார்கள் என்றும் கூறமுடியாது. ஆதலால், அதிருப்திகளுக்குக் காரணமானவைகளை மாற்றிக்கொள்வது இருவருக்கும் நலம். அதை நண்பர் ஸ்ரீனிவாசராகவன் அவர்களும் நன்றாய் விளக்கி இருக்கிறார்; அதாவது பிராமணர்களும் கால தேச வர்த்தமானத்துக்குத் தக்கபடி மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறினார். அதுதான் இப்போது இரு தரப்பினரும் கவனிக்க வேண்டியது என்று பார்ப்பனர்கள் மத்தியிலேயே பேசினாரே தந்தை பெரியார்சென்னை இராயப்பேட்டை இலட்சுமிபுரத்தில் உள்ள லட்சுமிபுரம் யுவர் சங்கம் என்கிற பார்ப்பன சங்கத்தில் தந்தை பெரியார் அவர்கள் பங்கு கொண்டு(5.1.1953) உரையாற்றியது. (விடுதலை 8.1.1953)

அந்தக் கூட்டத்தில் தந்தை பெரியார் பேசியதை இன்றைக்கும் கூட சிந்தித்துப் பார்த்திட வேண்டும் பார்ப்பனர்கள். இந்தச் சந்தர்ப்பத்தை எல்லாம் பார்ப்பனர்கள் பயன்படுத்திக் கொள்ள வில்லையே

நூல் : பார்ப்பன புரட்டுக்கு பதிலடி

ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...