காமராசரை -பசுவதைத் தடுப்பு என்ற பெயரால் இந்தியாவின் தலை நகரமான டில்லியில் (7.11.1966) உயிரோடு கொளுத்தி அவர் உயிரை ஏப்பம் விடலாம் என்று கருதினார்கள். ஆர்.எஸ்.எஸ்.
குண்டர்களும் ஜனசங்கப் பேர் வழிகளும், நிர்வாண சாமியார்களும், சங்கராச்சாரியார்களும் (பூரி சங்கராச்சாரியார், ஜோசிமடத்து சங்கராச்சாரியார்) லட்சக்கணக்கில் திரண்டு நின்று காட்டு விலங்காண்டித் தனமாக வெறியாட்டம் போட்டார்கள்.
நரகத்தின் வேட்டை நாய்கள் கட்டவிழ்த்து விடப்பட்டனவோ வென்று பிளிட்ஸ் எழுதியது. டில்லியில் சாதுக்கள் நடத்திய போர்க்களத்தை விரைந்து சென்று பார்த்த பத்திரிகையாளர்களுக்கு நரகத்தின் வேட்டை நாய்கள் கட்டவிழ்த்து விடப்பட்டனவோ என்று எண்ணும் வகையில் வளைந்து உடைந்த திரிசூலங்களும், தீஜ்வாலைகளும், ஏராளமான மலைப் பிஞ்சுகளும், எரிந்த கட்டடங்களையும் கார்களையும் ஏன்,
மனிதர்களையும்கூட கொளுத்திய காட்சிகளே பார்லிமென்டிற்கு முன்பும், அதன் அருகாமையிலும் தென்பட்டன என்று பிளிட்ஸ் எழுதியது. திட்டமிட்ட தாக்குதல் (Master Plan என்று இந்துவின் டில்லி நிருபர் எழுதினார்.
பார்ப்பன ஃபாசிஸ்டுகளின் கோரக் கூத்து! என்று 13.11.1966 தேதியிட்ட லிங்க் படம் பிடித்துக் காட்டியது.
பாங்குகளும், மருத்துவமனைகளும் கூட தாக்குதலுக்குத் தப்பிப் பிழைக்க வில்லை.
வெளியூர்களிலிருந்து திரண்டு வந்த மக்கள் வெள்ளத்தால் எங்கே டில்லி நகரமே அடித்துச் செல்லப்பட்டுவிடுமோ என்பதுபோல் தோன்றியது கோமாதாக்கி ஜெ என்று இரண்டரை லட்சம் மக்கள் தெருக்களில் ஊர்வலமாக முழங்கிக் கொண்டே சென்றனர் என்கிறது 19.11.1966 தேதியிட்ட பம்பாயின் கரண்ட் இதழ்.
தமிழ்நாட்டில் ஒரு கறுப்புக் காக்கை இருக்கிறது. அதைக் கல்லால் அடிக்க வேண்டும் என்று காமராசரை ஜாடை காட்டி ஆச்சாரியார் ராஜாஜி சென்னை கடற்கரையில் முழங்கினார்.
நூல் : பார்ப்பன புரட்டுக்குப்பதிலடி
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : பார்ப்பன புரட்டுக்குப்பதிலடி
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக