ஆரிய மாயை - அறிஞர் அண்ணா
Hindu Manners Customs and ceremonies” v‹w üš.
Abbe J.A. Dubois என்பவரால்,
1807-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
போற்றி!
போற்றி!!
பேராசைப்
பெருந்தகையே போற்றி!
பேச
நா இரண்டுடையாய் போற்றி!
தந்திர
மூர்த்தி போற்றி!
தாசர்தம்
தலைவா போற்றி!
வஞ்சக
வேந்தே போற்றி!
வன்கண
நாதா போற்றி!
கொடுமைக்
குணாளா போற்றி!
கோழையே
போற்றி, போற்றி!
பயங்கொள்ளிப்
பரமா போற்றி!
படுமோசம்
புரிவாய் போற்றி!
சிண்டுமுடிந்
திடுவோய் போற்றி!
சிரித்திடு
நரியே போற்றி!
ஒட்டுவித்தை
கற்றோய் போற்றி!
உயர்
அநீதி உணர்வோய் போற்றி!
எம்
இனம் கெடுத்தோய் போற்றி!
ஈடில்லாக்
கேடே போற்றி!
இறை,
இதோ, போற்றி! போற்றி!
ஏத்தினேன்
போற்றி! போற்றி!!
இந்தப் போற்றித் திருப்பா, புதுமையானதாக
இருக்கிறதே! இதன் பொருள் விளங்கவில்லையே! பேராசையும், வஞ்சகமும், பிறவுமான கேடுபயக்கும்
குணமுடையோரைப் போற்றுவது, மடமையன்றோ? ஒழித்திட வேண்டியதைத் தொழுதிடுவது அறிவுடைமையாகுமா?
தேளைத் தேவனென்றும், பாம்பைப் பரமனென்றும், நரியை நாதனே என்றும், புலியை புண்ணியாவென்றும்,
பித்தருங் கூறாரே! நீயோ, நயவஞ்சகரை - நா இரண்டுடையாரை, நாவார வாழ்த்துகிறாயே போற்றி
போற்றி என்று, இது என்ன பரதா? என்று கேட்பர், அன்பர். அடியேன் அறைவதல்ல அய்யன்மீர்!
நமது இனத்திலே உள்ளனரே, விரிந்த மனப்பான்மையும், பரந்த பாசமும், கனிந்த உள்ளமும், கருணை
வெள்ளமுங் கொண்ட ``சற்சூத்திரர்கள் அவர்கள் சதா காலமும், ஆரியரைப் போற்றி வாழுகிறார்களல்லவா?
அவர்கள் போற்றித் தொழுதிடும் ``பூசுரரின் திருக்கலியாண குணங்களை, அறிந்தோர் எடுத்துரைத்துள்ளனர்.
அடியேனுடைய வேலை அவற்றைத் தொகுத்துப் பார்ப்பன பக்தர்கள் நடத்தும் `போற்றி போற்றியுடன்
இணைத்து, அவசரத்திலே அகவலாக்கி உம்மிடம் தந்ததுதான்! நான் ஆரியரைப் போற்றவுமில்லை;
போற்றிடக் கூறவுமில்லை! அது போலவே, நான் அவர்களை ஏசவுமில்லை; ஏசிடும்படி உங்களை ஏவிவிடவும்
இல்லை. பிறர் கூறிய ஏசலை எடுத்துக் கூறுகிறேன்.
நூல் : ஆரியமாயை
ஆசிரியர் “ அறிஞர் அண்ணா
நூல் : ஆரியமாயை
ஆசிரியர் “ அறிஞர் அண்ணா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக