ஞாயிறு, 16 ஜூலை, 2017

வேம்பு இனிக்காது தேன் கசக்காது


மாஜி கவர்னர் ஜெனரல் உயர்திரு. சி. ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் சொல்லுகிறார்கள்: நான் வேத, சாஸ்திர, புராண, இதிகாச, உபநிஷத் தர்மங்களில் முழு நம்பிக்கை உடையவன்; ஜாதிப்பிரிவில் அதாவது, வர்ணாஸ்சிரம தர்மத்தில் மிக்க நம்பிக்கையும் கவலையும் உடையவன்; அவைகளைப் பரப்பவும். நிலை நிறுத்தவுமே நான் பாடுபடுகிறேன்; இனியும் அதற்காகவே பாடுபடுவேன் என்று சொல்லுகிறார்: எழுதுகிறார்: அதற்கு வேண்டி காரியங்களையும் செய்கிறார் என்றால், இனி யாரை மனதில் வைத்துக்கொண்டு எல்லா பார்ப்பனர்களும் இப்படித்தான் இருப்பார்களா? என்று நினைப்பது? வாயில் _ நாக்கில் _ குற்றம் இருந்தாலொழிய வேம்பு இனிக்காது

தேன் கசக்காது. பிறவியில் மாறுதல் இருந்தாலொழிய புலி புல்லைத் தின்னாது; ஆடு மனிதனைத் தின்னாது. அதுபோல வாக்கும் நம் பார்ப்பனர்கள் தன்மை  என்று உயர்நீதிமன்ற வரலாற்றில் இதற்கு முன் யாரும் பதிவு செய்திராத அரிய கருத்துரையை வரலாற்றுச் செப்பு சாசனமாக ஆதாரப் பூர்வமாகப் பதிவு செய்துவிட்டாரே தந்தை பெரியார்.


(நூல்: நீதி கெட்டது யாரால்?)

நூல் : பார்ப்பன புரட்டுக்குப்பதிலடி

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...