“ஒரு தாய் வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக்கும் சம அனுபவம் இருக்க வேண்டும் என்று கருதி ஒன்றுக்கொன்று குறைவு, அதிகம் இல்லாமல் பார்த்துக்கொள்வது எப்படி ஒரு தாய்க்கு குணமாக இருக்குமோ அதுபோலத்தான் எனக்குத் தோன்றுகிறது. மற்றும் அந்தத் தாய் தனது மக்களின் உடல்நிலையில் இளைத்துப்போய் வலிவுக் குறைவாய் இருக்கிற மகனுக்கு, மற்ற குழந்தைகளுக்கு அளிக்கிற போசனையைவிட எப்படி அதிகமான போசனையைக் கொடுத்து மற்ற குழந்தைகளோடு சரிசமமானமுள்ள குழந்தைகளாக ஆக்க வேண்டுமென்று பாடுபடுவாளோ, அதுபோலத்தான் நான் மற்ற வலுக்குறைவான பின்தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன். இந்த அளவு நான் பார்ப்பனர்களிடமும் மற்ற வகுப்புகளிடமும் காட்டிக்கொள்ளும் உணர்ச்சியாகும்.”
தந்தை பெரியார்
விடுதலை, 1-1-1962
தந்தை பெரியார்
விடுதலை, 1-1-1962
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக