இந்தப் பல ஆயிரவருங்களில் கீழ் ஜாதியாய் பிறந்து மேல் ஜாதியாய் செத்த மனிதன் ஒருவன்கூட கிடையாது. ஜாதியே இல்லாமல் பிறந்து, ஜாதியே இல்லாமல் செத்தவனும் எவனும் இல்லை. வேண்டுமானால் அவரவர் உங்களை ஏமாற்றவோ அல்லது தன்னையே ஏமாற்றிக் கொள்ளவோ சாமியாய் ரி´யாய், மகானாய், மகாத்மாவாய் செத்து இருக்கலாம். ஆனால் பறையனாய் பிறந்து பிராமணனாய் செத்தவரோ பிராமணனாய் பிறந்து பறையனாய் செத்தவனோ எவனும் இல்லை. இந்துமதத்தை விட்டவன் எவனாவது ஜாதி இல்லாமல் செத்து இருக்கலாம். அவனும் ஏதாவது ஒரு மதக்காரனாய் செத்து இருப்பானே ஒழிய, மனிதனாய் செத்து இருப்பானா என்பது சந்தேகம்தான்.
- பெரியார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக