பார்ப்பனர்கள் "பிராமண சமாஜம்' "பிராமண மகாசபை' என்றெல்லாம் வைத்து வெளிப்படையாக நாம் பெற்ற எல்லா உரிமைகளையும் எதிர்த்துப் பலவற்றை ஒழித்துக் கட்டிவிட்டார்கள். பார்ப்பனன் தன்னை மேல்ஜாதி என்றும், தன்னை பிராமணன் என்றும் அழைத்துக் கொள்ளுவதிலும்; நாமும்
அவனைப் பிராமணன் என்று சொல்லுவதிலும் அவனுக்குப் பெருமையுண்டு. ஆனால், நம்மை அவன் சூத்திரன் என்றழைப்பதிலும், சாஸ்திரமும் சட்டமும் நம்மைச் சூத்திரர் என்றே குறித்து வைத்துள்ளதிலும் நமக்கு எவ்வளவு இழிவும், வாழ்வுக்கேடும், முன்னேற்றத் தடையுமிருக்கின்றன. நாம் திராவிடன் அல்லது தமிழன் என்ற பெயரை வைத்துக் கொள்ளாமல் வேறு பெயரை வைத்துக்கொள்ள வேண்டுமென்றால் Š "சூத்திரர் கழகம்' என்று தானே வைத்துக் கொள்ள வேண்டும்?
- விடுதலை, சொற்பொழிவு, 08.01.1959
ஜாதி தர்மத்தை அனுசரிக்காதவர்களுக்குப் பிறந்தவர்கள் திராவிடர்கள் என்ற பெயர்!
(மனுதர்ம சாஸ்திரத்தில் 10Šவது அத்தியாயத்தில் சங்கர ஜாதி என்ற தலைப்பில்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக