புதன், 16 ஆகஸ்ட், 2017

மூலஸ்தானத்திற்குள் போய் விடு!


ஆரியன் எது?  சூத்திரன் ஏது?  என்று நம்மைக் கேட்கிறார்கள் சில அப்பாவி மக்கள்.  சூத்திரன், பிராமணன் இல்லையயன்றால், கோயிலில் மணியடிக்கும் தொழில் ஒரே ஜாதிக்காரன் வசமே இருக்கக் காரணமென்ன?  கோயில் அர்ச்சகர்கள் யார்?  அவர்கள் ஏன் சமஸ்கிருதம் ஓதுகிறார்கள்?  

சமஸ்கிருதம்தான் தேவபாஷை, மற்றவை மிலேச்ச பாஷை, நீச்ச பாஷை என்று ஆரிய சாஸ்திரம் கூறியிருப்பதை நீ அறிவாயா?  திடுதிடுவென்று நாலு ஜாதியாரும் கோயிலுக்குள் போவோம்.  சற்றிருங்கள் என்று கூறி பிராமணத் தோழன் உங்களைத் தாண்டிக் கொண்டு மூலஸ்தானத்திற்குள் போய் விடுகிறானா இல்லையா பாருங்களேன்?  இதைப் பார்த்த பிறகும் எந்தத் தோழனாவது பிராமணன் சூத்திரன் இல்லை என்று கூறுவானாயின் அவன் அறிவு மலையேறி விட்டது என்றுதானே கூற வேண்டும்.  ஏன் இந்த உயர்வு தாழ்வுக் கொடுமையை இன்னும் மூடி வைக்கப் பார்க்கிறீர்கள்?  உள்ளதை மூடிவைத்தால் அதுபுரை ஓட ஆரம்பித்துவிடும் என்பதை நீங்கள் அறியீரோ!

-  குடிஅரசு, சொற்பொழிவு, 08.05.1948

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக