திங்கள், 14 ஆகஸ்ட், 2017

எவரும் இளைத்தவர்கள் அல்ல


 இந்துமத ஆதாரப்படி, இந்துமத தர்ம சாஸ்திரங்களின் விதிப்படி இத்தொழிலாளிகள் இவ்வளவு பேரையும் உழவர், நெசவர், வாணியர், பல தொழில் தச்சர்கள் உட்பட      யாவரையும் வருணாசிரம சாதி முறையில் நாலாம்சாதி - சூத்திர சாதியாய் ஆக்கி மற்றும் அதனுள்ளும் கீழ்-மேல் படி வைத்து, ஒருவருக்கொருவர் உண்பன, தின்பன, தொடுதல் - நெருங்குதல் கூட இல்லாமல் இருக்கும்படியான இழிவுகளை உண்டாக்கி - ஒருவரை ஒருவர் இழித்துக் கூறிக்கொள்ளும்படியாகச் செய்துவைத்து, இந்த முறையும்கூட   நாட்டுக்கு ஒருவிதமாய் நடப்பிலிருக்கும்படியாக ஆக்கிக் கீழ்மைப்படுத்தி, அவர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் நலனுக்கும், மேன்மைக்கும் முயற்சி செய்ய வழி இல்லாமல் செய்து வைக்கப்பட்டிருக்கிறது.


இது ஒருபுறம் கல்லின்மேல் எழுத்துப்போல் ஆதாரத்திலும் அனுபவத்திலும் இருந்து வந்தாலும் Š இந்தத் "தொழிலாளர் சாதியார்கள்' ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் தனி   சாதியையும், வகுப்பையும், உயர்வாகப் பேசிக் கொள்வதிலும் வழிதேடிக் கொள்வதிலும் எவரும் இளைத்தவர்கள் அல்லர்.

- விடுதலை, தலையங்கம் - 16.2.1940

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக