இவ்வளவு அக்கிரமம் நீங்கள் செய்து கொண்டு, ""புல்லேந்தும் கை வாளேந்தும்'' என்று கூறுகிறீர்களே, அடுக்குமா, இந்த ஆணவம் உங்களுக்கு?
வாங்கோ! தம்பிகளே வெளியில் இப்படி நீங்கள் நேரில் வெளிவர வேண்டும் என்றுதானே இவ்வளவு காலம் பொறுத்திருந்தோம். எவ்வளவு சீக்கிரம் வெளி வருகிறீர்களோ, அவ்வளவு சீக்கிரம் எங்களுக்கு நலமாயிற்றே! அவ்வளவு சீக்கிரத்தில் எங்கள் இழிவும் ஒழிந்து போகுமே. நீங்கள் இருப்பது 100க்கு 3 பேர். நாங்கள் இருப்பது 100க்கு 97 பேர் எங்களில் ஒரு ஆள் உங்களில் ஒரு ஆளைக்கூடவா வெற்றிக் கொள்ள மாட்டான்? நாங்கள் 97க்கு 3 பேர் அழிந்தால் பரவாயில்லை. மிச்சம் இருக்கும் 94 பேராவது இழிவு நீங்கி மனிதர்களாய் வாழ்வார்கள். உங்களில் 3க்கு 3பேர் மாண்டால் அப்புறம் சைபர்தான் இருக்கும். புல்லேந்தியவர் வாளேந்தினால் வாளேந்தியவர் என்ன ஏந்துவார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். விரல் உரல் ஆனால் உரல் என்னவாகும் அப்புறம் உங்கள் கதி என்ன ஆகும்?
- குடிஅரசு, 29.05.1948
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக