திங்கள், 14 ஆகஸ்ட், 2017

""பிராம்மண ஸ்திரீகளுக்குத் தனி இடம்''


 மதுராந்தகத்தில் சமீபத்தில் நடந்த நாடகத்திற்காகப் போடப்பட்ட ஒரு துண்டு விளம்பரத்தின் அடியில் ""பஞ்சமர்''களுக்கு டிக்கட்டு கொடுக்கப்பட மாட்டாது.  பிராம்மண ஸ்திரீகளுக்குத் தனி இடம் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது'' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது'' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.  இதற்குக் காரணம் அந்த ஊர் சேர்மன் இந்த நிபந்தனையின் பேரிலேயே நாடகக் கொட்டகைக்கு லைசென்சு கொடுத்திருக்கிறாராம்.  துண்டு விளம்பரம் நமது பார்வைக்கு வந்திருக்கிறது.  கூத்தாடிப் பெண்களும் கூத்தாடி ஆண்களும் கூடி கூத்தாடுகிற இடத்தில்கூட ஆதி திராவிடர்கள் போகக் கூடாது என்பதும், அங்கு கண்ணே!  பெண்ணே!  என்று பேசிக் கொண்டு மூக்கையும் காதையும் கன்னத்தையும் கடித்துக் கொண்டு விளையாடுவதைப் பார்க்கப் போகும் பார்ப்பனப் பெண்களுக்கும் கூட தனி இடம் ஒதுக்கித் தருவது என்பதும் பார்ப்பன ஆதிக்கத்தைக் காட்டுகின்றதா இல்லையா என்று கேட்பதோடு இது சைமன் கமி­னுக்குத் தெரிய வேண்டாமா என்று கேட்கின்றோம்.

- குடிஅரசு, 12.02.1928

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக