கேள்வி - "பிராமணர்கள் தமிழகத்தில் விரும்பப்படவில்லை' என்ற துக்ளக் ஆசிரியர் சோவின் கருத்து பற்றி?
பதில் - பிராமணர்கள் உயர்ஜாதியினர் என்ற அகங்காரம் என்றோ மறைந்து விட்டது. சமுதாய நீரோட்டத்தில் தங்களையும் அவர்கள் இணைத்துக் கொண்ட நிலையில், அவர்களை ஒதுக்குவதும், ஒடுக்குவதும் வெகுவாகக் குறைந்து போய்விட்டது. இப்பொழுது தோன்றியிருப்பது சமுதாயத்தைப் பிரிக்கும் வேறுவித ஜாதிப்பிரிவினை ஆபத்து!
(கல்கி, 19.9.2010)
- இவ்வாறு "கல்கி' இதழில் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
28.8.2010 "தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளேட்டில் பக்கம் எட்டில் தலைப்புச் செய்தியாக.
Ignored by Political parties and Denied Welfare,
Large Sections of a Traditionally Elite in Poverty.
Brahmins on the margins, Fight for survival எனும் தலைப்பில் வெளி வந்தது.
இதில் "சோ' ராமசாமியின் கருத்தும் கேட்கப்பட்டுள்ளது. "Brahmins are not wanted in Tamilnadu,
beyond that I do not want to comment' என்று கூறியுள்ளார்.
ஆதங்கத்தோடோ, ஆத்திரத்தோடோதான் அய்யர்வாளின் வாயிலிருந்து இச்சொற்கள் கொப்பளித்துக் கிளம்பியிருக்க வேண்டும்.
அவர் எந்தக் கண்ணோட்டத்தில் சொல்லியிருந்தாலும் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல பார்ப்பனர்கள் என்பவர்கள் எங்கும் தேவைப்டாதவர்கள்தான்.
- கவிஞர் கலி. பூங்குன்றன்
விடுதலை ஞாயிறு மலர், 26-9-2010
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக