சவ உணவகம், காந்தியார் சாராயக் கடை, அன்னை தெரசா பயில்வான் கூடம்; திருவிக சுருட்டுக்கடை, சீனிவாச அய்யங்கார் கசாப்புக் கடை என்றெல்லாம் பெயர் இருந்தால் சிரிப்பு மட்டுமா வரும்? அடுத்த நொடியில் எரிச்சல்கூட பீறிட்டுக் கிளம்பும்.
இப்பொழுது ஒரு செய்தி குஜராத்திலிருந்து வெளிவந்திருக்கிறது.
உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் மணல் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி குஜராத் காந்திநகரில் காந்தி யாருக்குப் பிரம்மாண்டமான நினைவிடம் கட்டப்படும் என்பதுதான் அந்தச் செய்தி.
பரவாயில்லையே. நற்செய்தி தானே இதில் என்ன பிரச்சினை என்ற வினா எழக்கூடும்;
இந்த அறவிப்பைக் கொடுத்தவர் யார் என்பது தானே முக்கியம். குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திரபாய் தாமோதரதாஸ் மோடிதான். (மோடி வித்தை என்பது இது தானோ!) இந்த அறிவிப்புக்குச் சொந்தக்காரர்.
இராமலிங்க விலாஸ் மிலிட்டரி ஓட்டல் என்பதோடு
இப்பொழுது இதனைப் பொருத்திப் பார்த்தால் உண்மை பட்ட வர்த்தனமாகப் புலப்பட்டு விடுமே!
பகவத் கீதையிலிருந்து சுலோகத்தை எடுத்துக்காட்டி காந்தியாரைச் சுட்டுக் கொன்றதை நியாயப்படுத்திய நாதுராம் கோட்சே கதை ஒருபுறம் இருக்கட்டும்.
நாட்டில் நல்லவர், வல்லவர் என்று பீற்றிக் கொள்ளும் அடல் பிஹாரி வாஜ்பேயி தலைமையில் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது இந்தக் கூட்டம் மும்பை, டில்லி போன்ற முக்கிய நகரங்களில் நாடகம் ஒன்றை அரங்கேற்றினார்களே நினைவிருக்கிறதா?
மை நாதுராம் கோட்சே போல்தா என்பதுதான் அந்த நாடகத்தின் பெயர். நான் தான் நாதுராம் கோட்சே பேசுகிறேன் என்பது தலைப்பு.
நான் காந்தியார் என்ற மனிதனைக் கொல்லவில்லை; காந்தியார் என்ற அரக்கனைக் கொன்றேன் என்று அந்த நாடகத்திலே கோட்சே கூறுகிறான். காந்தியாரைக் கொன்ற கோட்சே மகான் என்பதுதான் அந்த நாடகத்தின் அடிநாதம் உச்சகட்டம் (Climax)
இந்தக் கூட்டம் காந்தியாருக்கு உலகப் பல பகுதிகளிலிருந்தும் மண்ணையும், தண்ணீரையும் கொண்டு வந்து பிரம்மாண்ட நினைவுச் சின்னம் எழுப்புகிறது என்றால் இதன் பொருள் என்ன?
படிப்பவர் புத்திக்கே விட்டு விடுவோம்!
29.4. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 3,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக